விஸ்மயா தற்கொலை வழக்கு: 100 சவரன் வரதட்சிணை கொடுத்தும் பேராசை.. கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை
திருவனந்தபுரம்:கேரளாவில் வரதட்சிணை கொடுமையால் இளம்பெண் தற்கொலைக்கு காரணமான கணவர் கிரண்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்லம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொல்லத்தைச் சேர்ந்தவர் 22 வயது விஸ்மயா வி நாயர். இவர் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார். இவருக்கும் அரசு ஊழியரான கிரண்குமாருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது விஸ்மயாவின் தந்தை, கிரண்குமாருக்கு வரதட்சிணையாக 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், சொகுசு கார், ரூ 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

வரதட்சிணை
இத்தனையையும் பெற்றுக் கொண்டும் திருப்தி அடையாத பேராசைக்காரர் கிரண்குமார், கூடுதலாக வரதட்சிணை கேட்டு விஸ்மயாவை சித்ரவதை செய்துள்ளார். இதுகுறித்து தனது தந்தையிடம் விஸ்மயா கூறிய நிலையில் அவரது தந்தை, கிரண்குமாரிடம் இதற்கு மேல் என்னால் வரதட்சிணை கொடுக்க முடியாது என கூறிவிட்டார்.

விஸ்மயா
இதனால் ஆத்திரம் அடைந்த கிரண்குமார், விஸ்மயாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். தினந்தோறும் அடி, உதையால் வாழ்க்கையே வெறுத்த விஸ்மயா இனி இந்த வாழ்க்கையே வேண்டாம் என கருதி கடந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு முதல் நாள் இரவு கிரண்குமார் அடித்ததால் தனக்கு ஏற்பட்ட காயங்களை புகைப்படமாக எடுத்து வாட்ஸ் ஆப்பில் உறவினருக்கு பதிவிட்டிருந்தார்.

குற்றவாளி என தீர்ப்பு
இதையடுத்து கிரண்குமார் கைது செய்யப்பட்டார். அவர் அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கொல்லம் கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் விஸ்மயா மரணத்தில் கிரண்குமார்தான் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கிரண்குமாருக்கு என்ன தண்டனை
இந்த நிலையில் கிரண்குமாருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்லம் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித் தீர்ப்பளித்துள்ளார். மேலும் ரூ 12.50 லட்சம் அபராதமும் கிரண்குமாருக்கு விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தில் ரூ 2 லட்சத்தை விஸ்மயாவின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications