பேருந்தில் தவறாக நடந்துக்கொண்டதாக வீடியோ! இளைஞரின் சோக முடிவுக்கு காரணமான இளம்பெண் அதிரடி கைது!
திருவனந்தபுரம்: பேருந்தில் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக கூறி, அதை வீடியோ எடுத்து இளம்பெண் ஒருவர் வெளியிட்டார். அவர் வெளியிட்ட வீடியோவால், சம்பந்தப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவத்தில், இளைஞரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைத செய்யப்பட்டிருக்கிறார்.
பெண்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், பாலியல் அத்து மீறல்கள் கொலைக்குற்றம் போல அணுகப்படும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன.

என்ன நடந்தது?
இந்த சூழலில்தான் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ஷிம்ஜிதா முஸ்தாஃபா எனும் இளம்பெண் பேருந்தில் பயணித்தபோது, அதே பேருந்தில் புதியறையைச் சேர்ந்த தீபக் எனும் இளைஞர் பயணித்திருக்கிறார். இவர் ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை பணி நிமித்தமாக கண்ணூருக்குப் பேருந்தில் சென்றபோது, அதே பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம், தவறாக நடந்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேரானது.
தற்கொலைக்கு காரணம்
சமூக ஊடகங்களில் பரவிய இந்த வீடியோ, இளைஞரின் கவனத்திற்குச் சென்றதால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் கூறினர். ஆரம்பத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, குடும்பத்தினர் புகாரைத் தொடர்ந்து, பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவு 108-ன்படி இளம்பெண் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து தற்போது இளம்பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
விசாரணைக்கு உத்தரவு
இச்சம்பவம் குறித்து, வட மண்டல துணை ஆய்வாளர் ஜெனரல் ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 19 அன்று நடைபெறும் ஆணையத்தின் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்படும்.
கைது நடவடிக்கை
இதற்கிடையே, பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார். விசாரணையில் தாமதம் ஏற்பட்டதாக கூறியுள்ள அவர், வீடியோ எடுத்த பெண் ஓர் அரசியல் கட்சியின் தீவிர பணியாளர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications