சபரிமலைக்குள் பெண்கள் நுழைய கூடாது.. கேரளாவில் சட்டசபை முற்றுகை.. மாபெரும் போராட்டம்
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை இந்து அமைப்பினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை இந்து அமைப்பினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது. பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதற்கு எதிராக வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடி வருகிறார்கள். பெண்களும் கூட இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
|
பெரிய அளவில் கூட்டம்
கடந்த சில நாட்களாக சில இடங்களில் நடந்து இப்போது பெரிய போராட்டமாக மாறியுள்ளது. முக்கியமாக பெண்கள் அதிக அளவில் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். கேரளா பாஜக தொடங்கி பல கட்சிகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்துத்துவா அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது.
|
சட்டசபை முற்றுகை
இந்த நிலையில் போராட்டத்தின் ஒரு கட்டமாக அங்கு சட்டசபை முற்றுகை செய்யப்பட்டுள்ளது. அங்கு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இதற்காக அவசர சட்ட திருத்தம், கொள்கை முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
|
தூங்குவோம்
அதோடு சபரிமலை கோவிலுக்கு செல்லும் பாதை முழுக்க தூங்க போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பெண்கள் உள்ளே நுழையாத அளவிற்கு தூங்க போகிறோம் என்று அவர்கள் கூறி உள்ளனர். பெரும்பாலும் இந்த போராட்டத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்த பெண்கள்தான் அதிகமாக கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
உள்ளே விட மாட்டோம்
அதேபோல் இன்னும் 48 மணி நேரத்திற்கு பின், பெண்கள் அந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. என்ன நடந்தாலும் நாங்கள் பெண்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று இந்து அமைப்புகள் சபதம் ஏற்றுள்ளது.