பணியாத தமிழ்நாடு, மேற்கு வங்கம்! புதிய கல்வி கொள்கையை ஏற்ற கேரளா.. திடீர் யூடர்ன் ஏன்
திருவனந்தபுரம்: மத்திய அரசின் ‛பிஎம் ஸ்ரீ' திட்டத்தின் புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடும், கேரளா, மேற்கு வங்கம் ஏற்காமல் இருந்தது. இந்நிலையில் தான் திடீரென்று கேரளா யூடர்ன் அடித்துள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் புதிய கல்வி கொள்கையை ஏற்கும் வகையில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலமாக புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலமாக ஸ்டாலின் ஆளும் தமிழகம் மற்றும் மம்தா ஆளும் மேற்கு வங்கம் மட்டுமே உள்ள நிலையில் கேரளா திடீர் யூடர்ன் அடித்ததன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் புதிய கல்வி கொள்கை (தேசிய கல்வி கொள்கை)கடந்த 2020ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2022ம் ஆண்டில் நடைமுறைக்கு கெண்டு வரப்பட்டது. இந்த கல்வி கொள்கையின்படி நாடு முழுவதும் 14,500 மாதிரி பள்ளிகளை அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும் 5 ஆண்டுகளில் மத்திய அருசின் ரூ.18,128 கோடி உள்பட ரூ.27,360 கோடி பட்ஜெட்டாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்படும். அதனை வைத்து பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வியின் தரத்தை மாநிலங்கள் உயர்த்த முடியும். இந்த கல்வி கொள்கையை நம் நாட்டில் உள்ள 33 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 3 மாநிலங்கள் ஏற்கவில்லை.
தமிழக அரசை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கையை பின்பற்றும் நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை என்பது மும்மொழியை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. இதனால் தமிழக அரசு ஏற்கவில்லை. அதேபோல் கேரளா, மேற்கு வங்க மாநில அரசுகளும் தங்களின் கொள்கைக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பின்பற்றும் வகையில் உள்ளதாகவும் கூறி புதிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை.
இதனால் இந்த 3 மாநிலங்களுக்கும் புதிய கல்வி கொள்கையின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. புதிய கல்வி கொள்கையை ஏற்றால் உடனடியாக நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் கேரளா அரசு திடீரென்று யூடர்ன் போட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைந்துள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் இதற்கு கையெழுத்திட்டுள்ளார். இதனை ஆளும் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தியடைந்துள்ளது. இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கேரளாவில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கிண்டலடித்துள்ளது.
அதேவேளையில் கேரளா கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தங்களின் செயல்பாட்டை நியாயப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர், ‛‛"மாணவர்களுக்கு சேரவேண்டிய ஆயிரக்கணக்கான மத்திய நிதியை தடுத்துவைத்துக்கொண்டு கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டோம் பொதுக்கல்வியை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு அனுமதிக்காது. மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு ரூபாயைக் கூட இழக்கவும் அரசு தயாராக இல்லை'' என்று கூறியுள்ளார்.
கேரளா இந்த புதிய கல்வி கொள்கையில் இணையாமல் இருந்ததால் தற்போது வரை ரூ.1158.13 கோடியை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. அதாவது 2025-26ம் ஆண்டுக்கான சமக்கிர சிக் ஷ திட்டத்தின் கீழ் ரூ.456 கோடி, அதற்கு முன்பு 2024-25ம் ஆண்டுக்கான ரூ.513.54 கோடி, 2023-24ம் ஆண்டுக்கான ரூ.188.6 கோடி என்று மொத்தம் ரூ.1,158.13 கோடி நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது புதிய கல்வி கொள்கைக்கான திட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் கையழுத்திட்டதன் மூலம் மத்திய அரசு சார்பில் 2027 ம் ஆண்டு வரை கேரளாவுக்கு போக வேண்டிய ரூ.1476.13 கோடி வரை கிடைக்க உள்ளது. பெண்டிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ.1,158.13 கோடி உடன் கூடுதல் பணத்தை சேர்த்து மொத்தம் ரூ.1,476.13 கோடி வரை கிடைக்கும். அதுமட்டுமின்றி சமக்கிர சிக் ஷ திட்டத்தின் கீழ் ரூ.971 கோடி கிடைக்கும். இதுதான் கேரளாவை புதிய கல்வி கொள்கையில் இணைய வைத்துள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications