புதுத்தாலி வாசம்கூட போகல.. கல்யாணம் ஆன 15 நாளில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்.. பரபரப்பு

திருமணம் முடிந்த 15 நாளில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கல்யாணம் ஆகி 15 நாளில், காதலனுடன் ஓடிவிட்டார் இளம்பெண்.. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை கூட்டி வருகிறது.

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. 15 நாளைக்கு முன்புதான் இரு குடும்பத்தார் மற்றும் சுற்றம் சூழ திருமணம் நடந்தது.

ஆனால், திடீரென மாமியார் வீட்டில் இருந்த, கல்யாண பெண்ணை காணவில்லை.. அதுமட்டுமல்ல, வீட்டில் இருந்த 50 சவரன் நகை மற்றும் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றிருக்கிறார்.. அதோடு சரி, வீட்டுக்கு திரும்பி வரக்காணோம்.

 கல்யாண பெண்

கல்யாண பெண்

எங்கெங்கோ தேடியும் கிடைக்கவில்லை.. அவருடைய செல்போனுக்கு போன் செய்துள்ளனர்.. ஆனால் கிடைக்கவில்லை.. இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தரப்பட்டது.. அவர்களும் பதறிக் கொண்டு வந்தனர்.. மகளை காணவில்லை என்று போலீசில் புகார் தந்தனர்,. அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்..

 ஓட்டம்

ஓட்டம்

அப்போதுதான் அந்த பெண் எஸ்பிஐ வங்கியில் கலெக்‌ஷன் ஆபீசராக வேலை பார்த்து வருபவர் என்பதும், அந்தப்பெண் காதலனுடன் ஓடிப்போனதும் தெரியவந்தது...இதனையடுத்து இந்த ஜோடியை போலீசார் தேட துவங்கினர். இறுதியில் ஒருவழியாக கண்டுபிடித்து காதலனையும், அந்த பெண்ணையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.. ஆனால், கணவருடன் வாழ தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார்..

காதல்

காதல்

அத்துடன் தன்னுடைய குடும்பத்தினருடன் செல்லவும் விருப்பமில்லை, காதலனுடனேயே வாழ விரும்புவதாக கூறினார்.. இதை கேட்டு பெண்ணின் பெற்றோர் பதறிவிட்டனர்.. இவர்கள் இருவரும் காதலித்து வந்த விவரம் பெண்ணின் பெற்றோருக்கு ஏற்கனவே தெரியுமாம்.. முறைப்படி வந்து பெண் கேட்டும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகளின் திருமணத்துக்கும் மறுத்துள்ளதாக தெரிகிறது.. அதனால்தான் விருப்பமில்லாமல் இந்த திருமணத்தை செய்ததாக இளம்பெண் கூறுகிறார்..

 பரபரப்பு

பரபரப்பு

ஆனால் பெண்ணின் பெற்றோரோ, சொத்து கையில் வருவதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்து, இப்போது 2 பேரும் ஓடிப்போயுள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இறுதியில், தன்னுடைய நகைகளை கழட்டி குடும்பத்தினரிடம் தந்துவிட்டு, காதலனுடனேயே அந்த பெண் சென்றுவிட்டார். இந்த சம்பவம்தான் கேரளாவில் பரபரப்பை கூட்டி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+