ஒரே பரபரப்பு.. மாவோயிஸ்ட் கைது விவகாரம்.. கோவை உட்பட 5 மாவட்டங்களில் 23 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை
என்ஐஏ அதிகாரிகள் 5 மாவட்டங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்
திருவனந்தபுரம்: கேரளாவில் மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேனி, ராமநாதபுரம், மதுரை, கோயம்புத்தூர் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கடந்த 5ம் தேதி கேரள மாநிலம் விழிஞ்ஞம் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சற்குணம்(எ) சபேசன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவை சேர்ந்தவர் கைது செய்தனர்.
சற்குணம் கைதுக்கு பிறகு இந்த வழக்கு தொடர்புடைய 5 மாவட்டங்களில் 23 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அதிகாலையிலேயே திடீர் சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டது பெரும் பரபரப்பை கூட்டி வருகிறது.. சிவகங்கை, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் உள்ள மாவோயிஸ்ட் காளிதாஸ் சகோதரர் சிங்காரம் வீடு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இலங்கை தமிழர் சற்குணம் வீடு, ஆதரவாளர்களான கோவை புலியகுளம் மருத்துவர் தினேஷ் மற்றும் டேனிஷ் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல, பொள்ளாச்சி அடுத்த அங்கலங்குறிச்சி பகுதியிலுள்ள சந்தோஷ், பெரியகுளத்தில் வேல்முருகன் ஆகியோர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். கேரள சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் காளிதாஸ் என்பவரின் சகோதரர் தான் சிங்காரம்.. இவரது வீடு சிவகங்கை அண்ணா நகரில் உள்ளது... அங்கும் அதிகாரிகளின் சோதனை நடக்கிறது..
சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!
தேனி, பெரியகுளம் எண்டபுளி அண்ணாநகரில் வசிக்கும் வேல்முருகன் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. இதில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சற்குணம் (எ) சபேசன் வீட்டில் 2வது முறையாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சந்தோஷ் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், கோவை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் என்ஐஏ திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.