பிரேமம் பட நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகார்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. என்ன ஆச்சுனு பாருங்க
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள திரையுலகமே அலறிப்போனது. அந்த அறிக்கையில் நிவின் பாலி மீதும் பாலியல் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி எஃப்ஐஆரில் இருந்து அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சாதாரணமாக வாழ்க்கையில் நடக்கும் சில ஒன் லைன் சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்த படத்தையும் எடுத்து ஹிட் ஆக்குவதே மலையாள சினிமா பாணி. தமிழகத்தில் மலையாள படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபகாலமாக மலையாள படங்கள் பல இந்திய அளவில் பெரிய ஹிட்களைக் கொடுத்தன.

தரமான பல படங்களைக் கொடுத்து பாராட்டைப் பெற்று வந்தது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் ஒட்டுமொத்த கேரள திரையுலகமே தலைகுனிவைச் சந்தித்துள்ளது. கேரள மாநில அரசால் கடந்த 2017 ஆம் தேதி ஹேமா கமிட்டியை அமைத்தது. பெண் நடிகர்கள், கலைஞர்களுக்கு எதிரான பாலியல் பிரச்னை குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கமிட்டியிடம் பல பெண் கலைஞர்களிடம் இருந்து தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் மற்றும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதில், முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளதால் கேரள திரையுலகே அதிர்ந்து போயுள்ளது. மோகன்லால், இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், முகேஷ் உள்ளிட்ட பலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் நிவின் பாலி மீதும் ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தன்னை வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்த நிவின் பாலி, இது பொய் குற்றச்சாட்டு என்றும், சட்டப்படி போராடி இந்த வழக்கில் இருந்து வெளியே வருவேன் என்றும் தெரிவித்திருந்தார். இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், பாலியல் புகார் அளிக்கப்பட்ட தேதியில் நிவின் பாலி தன்னுடன் 'வர்ஷங்களுக்கு சேஷம்' படபிடிப்பில் இருந்ததாகவும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, அப்பெண் அளித்த புகாரின் பேரில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தப் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை எர்ணாகுளம் டிஒய்எஸ்பி கொத்தமங்கலம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் அப்பெண் கூறியிருந்த தேதியில் நிவின் பாலி சம்பவம் நடந்த இடத்தில் நிவின் பாலி இல்லை என்று தெரிவிக்கபபட்டுள்ளது. மேலும், நிவின் பாலிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் அவரது பெயர் எஃப்ஐஆர் இல் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சிறப்பு புலனாய்வு குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நிவின் பாலின் மீதான புகார் தொடர்பாக அவருடைய பயண விவரங்கள், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவர் மீதான பாலியல் புகார் குறித்த குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தவில்லை. போதிய ஆதாரம் இல்லாததால் அவருடைய பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications