பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத் தொடர்பு.. எலும்பும், கறியும் போட்டு வளர்த்தேனே.. ஓனர் உருக்கம்!
திருவனந்தபுரம்: பக்கத்துவீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் அதன் உரிமையாளர் அந்த நாயை விட்டு விடுவதாக ஒரு கடிதத்துடன் அதை துரத்திவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் விலங்கு உரிமை ஆணையத்தின் உறுப்பினராக உள்ள ஸ்ரீதேவி தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில் சாக்கா மார்க்கெட் முன்பு கழுத்தில் ஒரு கடிதத்துடன் இருந்த நாய் குட்டியை விலங்குகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஒருவர் மீட்டெடுத்தார்.
அந்த கடிதத்தை அந்த நாயின் உரிமையாளர் எழுதியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது "இது மிகவும் நல்ல நாயாகும். நல்ல பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது. அதிக உணவை உண்ணாது. இந்த நாய்க்கு நோய்கள் கிடையாது.

கண்டுபிடித்தேன்
5 நாட்களுக்கு ஒரு முறை குளிக்கும். இது குரைக்க மட்டுமே செய்யும். 3 ஆண்டுகளாக யாரையும் கடித்ததில்லை. பால், பிஸ்கெட், பச்சை முட்டை ஆகியவற்றை மட்டுமே உட்கொள்ளும். இத்தகைய நாய் எங்கள் பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை கண்டுபிடித்தோம்.

வேதனை
இதனால் இனி இந்த நாய் எங்களுக்கு தேவையில்லை. அதனால் இதை துரத்திவிடுகிறோம் என அந்த கடிதத்தில் எழுதியிருந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ குழந்தை போல் கடிதம் எழுதியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

தொடர்பு
நாம் எப்படி குழந்தை பெற்றுக் கொள்கிறோமே அது போல்தான் நாய்களுக்கிடையேயான உறவு என்பதை போல் கருத வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர் ஸ்ரீதேவி தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நாய் தனது உரிமையாளரை தேடுவதாகவும் இதை பெற விரும்பினால் தனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு ஒரு எண்ணையும் ஸ்ரீதேவி கொடுத்துள்ளார்.
புகார்
கள்ளக்காதலால் மனித குலத்துக்குத்தான் பிரச்சினை என்கிற போதிலும் இந்த உறவு நாயையும் விட்டு வைக்கவில்லை. மனிதன் எப்படி தன் வம்சத்தை விருத்தி செய்கிறானோ அது போல் நாய்களும் விருத்தி செய்கிறது என்பதை கூட புரியாமல் சின்னஞ்சிறிய நாயை தவிக்க விட்ட இந்த உரிமையாளருக்கு எதிராக ஸ்ரீதேவி புகார் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications