கோழிக்கோடு விமான விபத்து.. பலியான விமானி சாத்தே முன்னாள் விமானப்படை விங் கமாண்டர்!
திருவனந்தபுரம்: துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகியதில் விமானி உயிரிழந்தார். அவர் மிகவும் கைதேர்ந்த விமானியாவார்.
கொரோனா பரவலால் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாட்டுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் துபாய், சவூதி உள்ளிட்ட நாடுகளில் இருந்த இந்தியர்களை விமானம் மற்றும் கப்பல் மூலமாக தாயகம் கொண்டு வரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

எதிர்பாராத விபத்து
அந்த வகையில் துபாயில் 184 பயணிகள் உள்பட விமான பணியாளர்கள் என மொத்தம் 191 பேரை அழைத்து கொண்டு கோழிக்கோடு நகருக்கு இந்த விமானம் தரையிறங்கியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவே வெள்ளகாடாக காட்சியளிக்கும் நிலையில் கனமழையால் ஓடுதளத்தில் இறங்கிய விமானம் எதிர்பாராதவிதமாக சறுக்கிக் கொண்டு 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது.

காக்பிட்
இதனால் விமானமே இரண்டாக பிளந்தது. இதில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது பெயர் தீபக் வசந்த் சாத்தே. இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடன் இருந்த மற்றொரு விமானி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அவரும் இறந்துவிட்டார். விமானிகள் இருந்த காக்பிட் அறையும் , விமானத்தின் முன்கதவும் கடுமையாக சேதமடைந்தது.

யார் இந்த தீபக்
தீபக் மிகவும் கைதேர்ந்த விமானி என கூறப்படுகிறது. இவர் விமான படையின் முன்னாள் விங் கமாண்டராக இருந்தார்.கேப்டன் தீபக் சாத்தே விமான படையின் முன்னாள் விமானியாவார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை இயக்குவதற்கு முன்னர் சாத்தே ஏர் இந்தியாவின் ஏர் பஸ் 310-ஐயும் இயக்கிய அனுபவம் உடையவர்.

விருது
அதன் பின்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 737 விமானத்தை இயக்கி வந்தார். இவர் விமான படை அகாதெமியின் விருதை பெற்றுள்ளார். போர் விமானங்களை இயக்குவதிலும் நிறைந்த அனுபவம் மிக்கவர். பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் டெஸ்ட் பைலட்டாகவும் இருந்துள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications