காலையிலேயே படையெடுத்த அமலாக்கத்துறை.. திக்குமுக்காடிய பினராயி விஜயன்.. கேரளாவை அதிரவைத்த ரெய்டு
திருவனந்தபுரம்: கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துத்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள். கேரளா சட்டமன்ற தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே ரெய்டு நடந்திருப்பது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சிபிஎம் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் வெற்றி பெற்றார். 10 வருடங்களாக முதலமைச்சராக இருந்த பினராயி விஜயன் ஆட்சியை இழந்த வருத்தத்தில் உள்ளார். அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

சட்டவிரோத பணபரிமாற்றம்
அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் கேரளாவில் 10 இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள். அதில் பினராயி விஜயன் வீடு தான் ஹாட் ஸ்பாட். பினராயி விஜயனின் மகள் வீணா எக்ஸாலாஜிக் சொல்யூசன் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்திற்கும், கொச்சின் மினரல்ஸ் ருடைல் லிமிட்டெட் நிறுவனத்திற்கும் இடையே சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக வீணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2017 - 2020 காலகட்டத்தில் கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வீணாவின் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பரிமாற்றமாகியுள்ளது. இதேபோல 2023 ஆம் ஆண்டில் ரூ.2.70 கோடி பரிமாற்றமாகியுள்ளது. இந்த வழக்கில் வீணா சிக்கியது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரெய்டு காரணம்
அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்ய கோரி, கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை கேரளா நீதிமன்றம் தள்ளுபடி செய்தனர். இது நடந்த சில நாட்களிலேயே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. பினராயி விஜயன், அவர் மகள் வீணா, வீணாவின் கணவர், முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸ், கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். இது கேரளா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications