பெரியாரின் பிறந்த தினம்...பகுத்தறிவை நிலைநிறுத்த உறுதியேற்போம்...பினராயி விஜயன் டிவீட்
திருவனந்தபுரம்: தமிழ்நாடு முழுவதும் இன்று பெரியார் பிறந்த தினம், சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும், பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரின் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் விழுமியங்களை நிலைநிறுத்த உறுதியேற்போம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடியதில் பெரியாரின் பங்கு அளப்பரியது. இதனையடுத்து அவரை தென்னிந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமூகநீதி நாள்
தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியாரின் 144வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். இதனையடுத்து தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

டிவீட்
இதன் தொடர்ச்சியாக தற்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெரியார் குறித்து டிவிட் செய்துள்ளார். அதில், "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான நமது போராட்டத்தின் உருவகம்தான் பெரியர். அவரது பிறந்த நாளான இன்று, பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் விழுமியங்களை நிலைநிறுத்தவும், அவரது பாரம்பரியத்தை போற்றவும் உறுதிமொழி ஏற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் பெரியார் பிறந்த தினத்தில் அவரது போராட்டங்களை நினைவு கூர்வது வழக்கம்.

போராட்டம்
1924ம் ஆண்டில் கேரள மாநிலத்தின் வைக்கம் எனும் இடத்தில் நடைபெற்ற ஆலைய நுழைவு போராட்டத்தில் பெரியாரின் பங்கு அளப்பரியது. இங்குள்ள சிவன் கோயிலில் ஒடுக்கப்பட்ட மக்களை அனுமதிக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. போராடிய அனைவரையும் திருவிதாங்கூர் அரசு கைது செய்தது. இது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாட்டிலிருந்து பெரியார் இந்த போராட்டத்திற்கு சென்றிருந்தார்.

கைது போராட்டம் கைது
திருவிதாங்கூர் ராஜாவின் நண்பர் பெரியார். எனவே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அதனை மறுத்து, தான் அரசனின் நண்பனாக இங்கு வரவில்லையென்றும், போராட வந்திருப்பதாகவும் கூறி போராட்டத்தை முன்னெடுத்து சென்றார். போராட்டத்திற்கு சென்ற அவரை அரசு கைது செய்தது. ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் விடுதலையானதும் தமிழ்நாடு திரும்பாமல் மீண்டும் போராட்டத்திற்கு சென்றால். இம்முறை 4 மாதம் சிறை தண்டனை.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications