கேரளாவில் ‘Self Lockdown'.. காலை 11 மணி டூ மாலை 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் - பினராயி விஜயன்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் வெயில் அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கொரோனா காலத்தில் போடப்பட்ட லாக்டவுன் என்று நினைத்து தாமாகவே முன்வந்து 'சுயஊரடங்கை' கடைப்பிடிக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் தற்போது வெயில் உச்சம் தொட்டுள்ளது. பல மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. 40 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பநிலை பதிவாகும்போது வெப்ப அலை வீசும்.

தற்போது பாலக்காடு, கொல்லம், திருச்சூர் போன்ற மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் பினராயி விஜயன் கேரளா மக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
அதன்படி கேரளா மக்கள் சுயஊரடங்களை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பினராயி விஜய் கூறுகையில், ''கேரளாவில் வெயில் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் காலை 1 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் சுயஊரடங்களை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா பரவல் காலத்தில் போடப்பட்ட ஊரடங்கு என்று நினைத்து பொதுமக்கள் இந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் வெப்ப அலையால் உயிரிழப்புகள் ஏற்படலாம். இதனால் தேவையில்லாத பயணங்கள், வெளிப்புற வேலைகளை வெயில் நேரத்தில் தவிர்க்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும். வெயிலில் யாரும் சிரமப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஒருங்கிணைந்து மக்கள் அனைவரும் செயல்பட்டால் நாம் வெயில் காலத்தை எளிதாக கடக்கலாம்.'' என்று கூறியுள்ளார்.

முன்னதாக கேரளாவில் அரசு, பொதுக் கூட்டங்கள், வெளிப்புற விளையாட்டு, பேரணி, பட்டாசு வெடிப்பது போன்ற நிகழ்வுகளுக்கு நண்பகல் நேரத்தில் தடை விதித்துள்ளது. அதிகரித்து வரும் தீ விபத்துகள் பற்றியும், தீ விபத்துகள் ஏற்பட்டால் அதனை எப்படி சமாளிப்பது, தப்பிப்பது பற்றியும் அதிகாாரிகள் மாநில மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

அதிகரித்துள்ள வெயிலால் தொழிலாளர்கள், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோருக்கு குடிநீர் வழங்குவது, நிழலுடன் கூடிய ஓய்வு பகுதிகளை அமைக்க உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வலர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. நிவாரண வசதிகள் ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+