கேரளாவில் பினராயி விஜயன் மகுடம் சூட்டுவார்.. ஒற்றை இலக்கில் பாஜக... ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற முடிந்த சட்டசபைத் தேர்தலில் இடதுசாரிகள் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று முடிந்ததைத் தொடர்ந்து தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகித் தொடங்கியுள்ளன.

இடதுசாரிகள் ஆட்சி பிடிக்கும்
ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இடதுசாரிகள் 72-80 இடங்களில் வெல்லும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவில் இடதுசாரிகள் 91 இடங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எங்கே
அதேபோல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 58-64 இடங்களில் வெல்லும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக கடைசி
பாஜக கடைசி இடம் பிடிக்கும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கேரளாவில் குறைந்தபட்சம் இரட்டை இலக்கிலாவது தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்டது. இருப்பினும், பாஜக 1-5 இடங்களில் வெல்லும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் ஆட்சி
கேரளாவில் கடந்த சில தேர்தல்களாகவே இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறியே ஆட்சி அமைத்து வந்துள்ளன. ஆனால், இந்த முறை இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications