48 மணி நேரம்தான்.. என்ன நடந்தாலும் சபரிமலைக்குள் செல்வேன்.. தனியாக மெர்சல் காட்டும் ரேஷ்மா!
சபரிமலை கோவிலுக்குள் என்ன நடந்தாலும் நுழைந்தே தீருவேன் என்று கூறியுள்ளார் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாத்.
கண்ணூர்:என்ன நடந்தாலும் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்தே தீருவேன் என்று கூறியுள்ளார் கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாத்.
கேரளாவில் தற்போது இந்து அமைப்புகள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்குள் கண்டிப்பாக செல்வேன் என்று கூறியுள்ளார் ரேஷ்மா நிஷாத். கண்ணூர் அருகே இருக்கும் செருக்குன்னு என்று கிராமத்தை சேர்ந்த இவர் பல பெண்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
பேஸ்புக்கில் போஸ்ட்
கண்ணுரின் செருக்குன்னு என்று கிராமத்தை சேர்ந்த ரேஷ்மா பள்ளி ஆசிரியராக இருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் போட்ட பேஸ்புக் போஸ்ட் காரணமாக வைரல் ஆனார். சபரிமலை கோவிலுக்குள் வரும் 17ம் தேதி செல்ல போவதாக அறிவித்தார். தன்னுடன் விருப்பம் உள்ள பெண்களும் வரலாம் என்றும் கூறினார். இந்த போஸ்ட் 20 ஆயிரம் லைக்குகளை பெற்றது.

விரதம்
மேலும், இவர் தீர்ப்பு வந்ததில் இருந்தே விரதம் இருந்துள்ளார். சரியாக விரதம் இருந்து கோவிலிக்கு செல்ல தயாராகி உள்ளார். மேலும் கருப்பு உடை அணிந்து முறையாக ஆண்கள் இருப்பது போலவே விரதம் இருந்து இருக்கிறார். தீர்ப்பு வந்த அந்த நாளே விரதம் இருக்க தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார்.

கண்டிப்பாக செல்வேன்
இதுகுறித்து அவர், நான் கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிறந்தவள். ஆண்களை போலவே பெண்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தீர்ப்பின்படிதான் நான் நடக்க போகிறேன். யார் என்னை எதிர்த்தாலும், யார் என்ன செய்தாலும் நான் 17ம் தேதி கோவிலுக்குள் செல்வது உறுதி,. இது நடந்த தீரும், என்று தைரியமாக தெரிவித்து இருக்கிறார்.

பெரிய எதிர்ப்பு
இந்த நிலையில் அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் அவருக்கு கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது. அதே சமயம் இன்னும் நிறைய பெண்கள் என்னுடன் கோவிலுக்குள் வர முன்வர வேண்டும் என்றும் ரேஷ்மா கோரிக்கை வைத்துள்ளார். இந்துத்துவா அமைப்புகளுக்கு பயந்து கொண்டு வராமல் இருக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications