"ஜஸ்ட் மிஸ்".. அனிதாவை அலேக்காக தூக்கி கொண்டு ஓடிய ஓமணக்குட்டன்.. உயிரை காப்பாற்றி.. சபாஷ்!
ஓடும் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பெண்ணை போலீஸ்காரர் காப்பாற்றினார்
திருவனந்தபுரம்: ஓடும் ரெயிலில் திடீரென அனிதா என்ற பெண்ணுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.. அப்போதுதான் ஓமணக்குட்டன் என்ற போலீஸ்காரர், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அனிதாவின் உயிரை காப்பாற்றினார்.. அந்த காட்சிகள்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த சக பயணிகள், ஏதோ உடலில் பிரச்சனை என்பதை கவனித்துவிட்டு உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் சொன்னார்கள்..

அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு இதை தெரியப்படுத்தினார்கள்.. உடனடியாக ரெயில்வே போலீஸ் அதிகாரிகள், அனிதாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டனர்.
அந்த ரெயில் திருச்சூர் ரயில்வே ஸ்டேஷன் வந்ததுமே, ஓமணக்குட்டன் அனிதா இருந்த கம்பார்ட்மென்ட்டுக்கு ஓடினார்.. ஓமணக்குட்டன் ஒரு ரயில்வே போலீஸ்காரர்.. நோயாளியை அழைத்து செல்ல வீல் சேர், ஸ்டெச்சர் இப்படி எதற்காகவுமே அவர் காத்திருக்கவில்லை.. அனிதாவை இரு கைகளாலும் தூக்கி கொண்டு, மின்னல் வேகத்தில் ஓடினார்.
அங்கே தயாராக இருந்த டாக்டர்கள் திருச்சூர், அனிதாவுக்கு முதலுதவி சிகிச்சை தந்தனர்.. அதன்பிறகு, திருச்சூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. அங்கு அனிதாவை பரிசோதித்த டாக்டர்கள், ரயிலிலேயே ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாகவும், சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததால்தான் உயிர் காப்பாற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர்.
இப்போதும் அனிதா ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார்.. ஆனால் ஓமணக்குட்டனுக்குதான் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள், பயணிகள், அனிதாவின் குடும்பத்தினர், பொதுமக்கள் என எல்லாருமே பாராட்டினர்.. அனிதாவை போலீஸ்காரர் ஓமணகுட்டன் 2 கைகளில் ஏந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் காட்சிகள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications