"ஐயப்பனை" பார்க்க போறீங்களா.. அப்போ இதுதான் கண்டிஷன்.. கேரளாவில் வந்தது புது கட்டுப்பாடு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: பக்தர்களுக்கு மட்டுமல்ல, சபரிமலை கோவிலில் வேலை பார்ப்பவர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இப்போது விதிக்கப்பட்டு விட்டன.. இது எல்லாத்துக்கும் காரணம் கொரோனாதான்!
சபரிமலையில் இது சீசன்.. அதனால் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.. ஆனால், இப்போது தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால், முன்புபோல் அனைவருக்கும் அனுமதி இல்லை.

லட்சக்கணக்கில் பக்தர்கள் என்றில்லாமல், சில ஆயிரம் பேர் மட்டுமே இப்போது அனுமதிக்கப்படுகிறார்கள்.. அதுவும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்... 24 மணிநேரத்துக்கு முன் பெற்ற கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட்டை பக்தர்கள் கையிலேயே கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் விதிமுறை.
இந்நிலையில், பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், கோவிலில் பணியாற்றுபவர்களுக்கும் இப்போது கூடுதல் கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை விதித்துள்ளது.. இதற்கு காரணம், சமீபத்தில் ஒரு போலீஸ்காரர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதியானது.. அதனாலேயே மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் உள்ள காவல் துறையினர், அர்ச்சகர்கள், ஓட்டல்கள், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைவரும் 14 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொரோனா டெஸ்ட் செய்து, அதற்கான சர்ட்டிபிகேட்டை வைத்திருக்க வேண்டும்... கொரோனா இல்லை என்பதற்கான நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்கள் உடனடியாக சபரிமலை பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வசதியாக சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன... கேரளாவை சேர்ந்த எல்லாருக்கும் கொரோனா டெஸ்ட் இலவசமாகவும், மற்ற மாநில தொழிலாளர்களுக்கு ரூ.625 கட்டணத்திலும் மேற்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications