சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு.. பந்தளத்தில் குவிக்கப்பட்ட 2000 போலீசார்.. பலத்த பாதுகாப்பு!
சபரிமலை கோவில் தொடர்பான மறுசீராய்வு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் தொடர்பான மறுசீராய்வு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் அளித்த சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட உள்ளது.
சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மொத்தம் 65 மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கடந்த வருடம் அக்டோபர் 23ம் தேதி கூறியது. அதன்பின் விசாரணை நடந்து முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

அமர்வு
இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப் நாரிமன், டி.ஒய். சந்திரசூட், ஏ.எம் கான்வில்கர், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இதில் தீர்ப்பு வழங்கும். கேரள அரசு சார்பாகவும் இதில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த மனுக்கள் மீதான வாதம் மிக தீவிரமாக நடந்தது.

சபரிமலை வழக்கு
இந்த சபரிமலை தீர்ப்பு கடந்த வருடம் வந்த போதே பெரிய அளவில் பரபரப்பு நிலவியது. இந்த தீர்ப்பிற்கு எதிராக 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து போராடி வந்தனர். இதற்கு எதிராக பாஜக கட்சியும் பெரிய போராட்டம் நடத்தியது. சபரிமலை பந்தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது.

பெரிய கலவரம்
இந்த நிலையில் இந்தமுறையில் அதேபோல் கலவரம், போராட்டம் நடக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பந்தளம் பகுதி முழுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டும் 2557 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

சீசன் காலம்
இது சபரிமலை சீசன் என்பதால் இன்னும் சில நாட்களில் அங்கு பக்தர்கள் வழிபட வருவார்கள். அதனால் தினமும் அதிக எண்ணிக்கையில் போலீசார் நிற்க வைக்கப்பட வேண்டும். இந்து அமைப்புகள் போராட வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு ஏற்கனவே தகவல் வந்துள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு
இதனால் கோவிலை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினமும் 2500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கோவிலுக்கு வெளியே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications