சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு.. பந்தளத்தில் குவிக்கப்பட்ட 2000 போலீசார்.. பலத்த பாதுகாப்பு!
சபரிமலை கோவில் தொடர்பான மறுசீராய்வு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் தொடர்பான மறுசீராய்வு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் அளித்த சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட உள்ளது.
சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மொத்தம் 65 மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கடந்த வருடம் அக்டோபர் 23ம் தேதி கூறியது. அதன்பின் விசாரணை நடந்து முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

அமர்வு
இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப் நாரிமன், டி.ஒய். சந்திரசூட், ஏ.எம் கான்வில்கர், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இதில் தீர்ப்பு வழங்கும். கேரள அரசு சார்பாகவும் இதில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த மனுக்கள் மீதான வாதம் மிக தீவிரமாக நடந்தது.

சபரிமலை வழக்கு
இந்த சபரிமலை தீர்ப்பு கடந்த வருடம் வந்த போதே பெரிய அளவில் பரபரப்பு நிலவியது. இந்த தீர்ப்பிற்கு எதிராக 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து போராடி வந்தனர். இதற்கு எதிராக பாஜக கட்சியும் பெரிய போராட்டம் நடத்தியது. சபரிமலை பந்தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது.

பெரிய கலவரம்
இந்த நிலையில் இந்தமுறையில் அதேபோல் கலவரம், போராட்டம் நடக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பந்தளம் பகுதி முழுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டும் 2557 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

சீசன் காலம்
இது சபரிமலை சீசன் என்பதால் இன்னும் சில நாட்களில் அங்கு பக்தர்கள் வழிபட வருவார்கள். அதனால் தினமும் அதிக எண்ணிக்கையில் போலீசார் நிற்க வைக்கப்பட வேண்டும். இந்து அமைப்புகள் போராட வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு ஏற்கனவே தகவல் வந்துள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு
இதனால் கோவிலை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தினமும் 2500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கோவிலுக்கு வெளியே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications