பம்பை ஆற்றில் குறைந்த வெள்ளம்.. சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு விதித்த தடை நீக்கம்
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பத்தினம்திட்டா ஆட்சியர் திவ்யா அறிவித்துள்ளார்.
Recommended Video
கார்த்திகை மாதம் பிறந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்தது. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் இடுக்கி, பம்பா அணைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியாறு, பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பம்பை
இதனால் கடந்த 15-ஆம் தேதி அன்று சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பையில் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி 18 ஆம் தேதி வரை முன் பதிவு செய்த பக்தர்களுக்கு வேறு தேதியில் தரிசனம் செய்ய அனுமதிப்பது என கேரள அரசு முடிவு செய்தது. அது போல் தற்காலிக அவசர முன் பதிவு தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

7 இடங்கள்
கடந்த 10ஆம் தேதி முதல் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. காக்கி- அனதோடு அணைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பம்பை அணையிலிருந்து மேலும் தண்ணீர் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்பட வாய்ப்பிருப்பதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா கூறுகையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பம்பை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

உபரி நீர்
கல்கி அணையிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மழை குறைந்து பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்த பின்னர் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் மற்றும் கனமழை காரணமாக பக்தர்கள் வருகையை ஒழுங்குப்படுத்த ஆன்லைன் பதிவு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பக்தர்கள் அதை பயன்படுத்தி வருகிறார்கள்.

தடை நீக்கம்
சபரிமலைக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதுகுறித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா கூறுகையில் பம்பையில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சபரிமலை செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் செய்ய மீண்டும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications