சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு இலவச காப்பீடு.. கேரள அரசு மேஜர் அறிவிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சத்துக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும் என்றும், தேவஸ்தானம் மூலம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கேரள அரசு இந்த அறிவிபை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்ச்சக்கணக்கான பகதர்கள் வருகை தருவது வழக்கம். இது மட்டும் இன்றி ஒவ்வொரு மாதத்தின் தமிழ் மாதத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

அப்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். சபரிமலை சீசன் காலத்தில் வரும் பக்தர்களில் சிலர் மாரடைப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க சபரிமலையில் பல இடங்களில் மருத்துவ உதவி மையங்களை கேரள அரசும் தேவசம்போர்டும் அமைத்துள்ளது.
இந்த நிலையில்தான் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் வரும் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் 15 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை வரும் டிசம்பர் 26 ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை 2025 ஜனவரி 14 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதனால், பக்தர்களின் வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையின் போது, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு தேவஸ்தான துறை அமைச்சர் வாசவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மண்டல மற்றும் மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 16 ஆம் தேதிக்கு முன்னதாக ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலையில் பிரசாதமாக வழங்கப்படும் அரவணை 40 லட்சம் டின் இருப்பு வைக்கப்படும். இதை முன்னிட்டு அரவணை உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு விபத்து காப்பீடு ரூ.5 லட்சம் வழங்கப்படும். மரணம் அடையும் பக்தர்களின் உடல்கள் தேவஸ்தானத்தின் சொந்த செலவில் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும்.












Click it and Unblock the Notifications