ராமரை விட மோடியை பெரியவரா காட்டுறீங்களே.. இதுதான் நீங்கள் கற்றுக் கொண்டதா.. சசி தரூர் கடும் கோபம்
திருவனந்தபுரம்: ராமரை சிறுவனாகவும், பிரதமர் மோடியை பெரியவராகவும் சித்தரிக்கும் படத்தை பாஜகவினர் ஷேர் செய்து வருவதை, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார்.
ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவையொட்டி, சமூக வலைத்தளங்களில் ராம பக்தர்கள் மற்றும் பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் என்ற ஹேஷ்டேக்குடன் கருத்துக்கள் மற்றும் படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படித்தான், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தலைவர் ஷோபா கரந்தலாஜே ஒரு படத்தை ட்வீட் செய்துள்ளார்.
அதில், பிரதமர் மோடி ராம பிரான் கைகளை பிடித்து கோயிலை நோக்கிச் செல்கிறார். இதில், ராம் பகவான் சிறியவராகவும், பிரதமர் மோடி பெரியவராகவும் காட்டப்படுகிறார். அயோத்தி அதன் அன்புக்குரிய ராஜாவை திரும்ப தனது இல்லத்திற்கு வரவேற்கிறது என்று ஷோபா கூறியிருந்தார்.

ராமரை விட நீங்கள் பெரியவரா
இதை ரீடிவிட் செய்துள்ளார், சசி தரூர். அவர் ஹிந்தியில் இதுபற்றி கருத்து கூறுகையில், "அன்பும் கற்றுக்கொள்ளப்படுவதில்லை, இரக்கத்தைக் கற்றுக் கொள்ளவில்லை, பாசத்தையும் கற்றுக்கொள்ளவில்லை, ராமரை விட உங்களை பெரிதாகக் காட்டுவதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். அப்படியானால், ஸ்ரீராம சரிதத்தில் எந்த பகுதி உங்களால் கற்றுக்கொள்ளப்படுகிறது? என்று சொல்ல முடியுமா" என வினவியுள்ளார். ஆனால், அயோத்தியில் குழந்தை வடிவில், ராமர் வழிபடப்படுவதால், இவ்வாறு புகைப்படம் உலவுவதாக பாஜக ஆதரவாளர்கள் பதிலளித்து வருகிறார்கள்.

அமித் ஷா நன்றி
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பல நூற்றாண்டுகளாக உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது. இன்று, பிரதமர் மற்றும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா ஆகியோர் ராமர் கோயில் பூமி பூஜை செய்வதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை மதிக்கும் பணியை செய்துள்ளனர், இதற்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலை வாய்ப்பு
ஸ்ரீ ராமரின் லட்சியங்களும், எண்ணங்களும் இந்தியாவின் ஆன்மாவில் வாழ்கின்றன. ராமரின் குணமும், வாழ்க்கைத் தத்துவமும் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையாகும். ராமர் கோயில் கட்டப்படுவதால், இந்த புனிதமான நிலம் அதன் முழு மகிமையுடன் உலகில் மீண்டும் உயரும். மதம் மற்றும் வளர்ச்சியின் ஒருங்கிணைப்பால் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

மோடிக்கு வாழ்த்து
இந்த பிரமாண்டமான பிரபு ஸ்ரீ ராம் கோயிலின் கட்டுமானம் பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான மற்றும் தீர்க்கமான தலைமையைக் காட்டுகிறது. இந்த மறக்க முடியாத நாளில் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications