சாப்ட்வேர் இன்ஜினியர் டூ கோயில் பூசாரி.. "எங்க பரம்பரை தொழில்".. அதிரடி முடிவெடுத்த கேரள இளைஞர்
கடந்த சில மாதங்களாகவே சாந்தனுக்கு சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை பிடிக்காமல் போயுள்ளது. தாங்கள் பரம்பரை பரம்பரையாக பார்த்து வந்த பூசாரி வேலை மீது அவருக்கு திடீர் ஆர்வம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்: ஐடி வேலையை உதறித் தள்ளிவிட்டு விவசாயியாக மாறிய இளைஞர்களை பார்த்திருப்போம். ஆனால், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை உதறித்தள்ளிவிட்டு கோயில் பூசாரியாக இளைஞர் ஒருவர் மாறிய சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது.
பூசாரி வேலை செய்யும் போது கிடைக்கும் திருப்தி சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையில் கிடைக்கவில்லை என அந்த இளைஞர் கூறியுள்ளார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கேரள அரசின் உத்தரவை அடுத்து, அங்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பூசாரியாக வருவது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் முதன்மை அர்ச்சகராக இருந்தவர் நாராயணன் நம்பூதரி. இவர் ஆற்றுக்கால் கோயில் பரம்பரையை சேர்ந்தவர். இவரது மகன் சாந்தனு, நாகர்கோயிலில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

பூசாரி வேலை மீது ஆர்வம்
ஆனால், கடந்த சில மாதங்களாகவே சாந்தனுக்கு சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை பிடிக்காமல் போயுள்ளது. தாங்கள் பரம்பரை பரம்பரையாக பார்த்து வந்த பூசாரி வேலை மீது அவருக்கு திடீர் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை விட்டுவிட்டு பூசாரி வேலைக்கு சேர்ந்தால் அனைவரும் தன்னை கிண்டல் செய்வார்கள் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. இதனிடையே, தனது ஆசை பற்றி தந்தை நாராயணன் நம்பூதரியிடம் கூற, அவர் உடனே புறப்பட்டு வா என்று கூறியுள்ளார்.

பூசாரியாக மாறிய சாப்ட்வேர் இன்ஜினியர்
இதையடுத்து, லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சாந்தனு, தனது சாப்ட்வேர் இன்ஜினியர் வேலையை ராஜினாமா செய்தார். பின்னர், தாங்கள் பரம்பரை பரம்பரையாக வேலை பார்த்து வந்த திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பூசாரியாக பணியில் சேர்ந்தார் சாந்தனு. சாப்ட்வேர் வேலை வேண்டாம் எனக் கூறி பூசாரி வேலைக்கு வந்த சாந்தனுவை பற்றிதான் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

"இப்போதான் நிம்மதி"
இதுகுறித்து சாந்தனு கூறுகையில், "என்னதான் லட்சக்கணக்கில் வருமானம் வாங்கினாலும், மனதுக்கு பிடித்த வேலையை பார்ப்பதில்தான் மகிழ்ச்சி என்பதை சில மாதங்களுக்கு முன்புதான் புரிந்துகொண்டேன். மேலும், குடும்பத்தை பிரிந்து எங்கோ ஒரு நாட்டில் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எனக்கு இருந்தது. மேலும், கோயில் பூசாரியாக வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. எனது ஆசைக்கு என் தந்தை, மனைவி என யாரும் குறுக்கே நிற்கவில்லை. எனவே, எனது முன்னோர்களை போல ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன்" என்றார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications