மூணாறு நிலச்சரிவு.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் மண்ணோடு மண்ணாக புதைந்த சோகம்!
இடுக்கி: இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த பெட்டிமுடி பகுதியில் நடந்த நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் மண்ணில் புதைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
கேரளாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை கருப்பு வெள்ளி என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு கனமழை, நிலச்சரிவு, கோழிக்கோடு விமான விபத்து என சோகங்கள் வரிசைக் கட்டிக் கொண்டிருந்தன.
மூணாறுக்கு அருகில் உள்ள பெட்டிமுடி பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு தேயிலை தோட்டத்தில் பலர் அங்கேயே தங்கி பணியாற்றி வந்தனர்.

மண்ணோடு புதைந்தவர்கள்
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் பெட்டிமுடி பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு தங்கியிருந்த தொழிலாளர்களின் 25 வீடுகள் மண்ணோடு புதைந்தன. இந்த இயற்கைச் சீற்றத்தில் 80-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

12 பேர் மீட்பு
இந்த நிலையில் இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கிய 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 47 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் வானிலை மாற்றங்களுக்கேற்ப மீட்பு படையினர் துரிதமாக செயல்படுகிறார்கள்.

உறவினர்கள்
கொரோனா விடுமுறைக்காக தந்தையை பார்க்க குழந்தைகள், உறவினர்கள், அங்கேயே தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என மண்ணில் புதைந்துள்ளனர். இவர்களில் 19 பேர் மாணவர்களாவர். பெட்டிமுடியில் தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

மயக்கம்
வரும் சடலங்களை ஒரு பெரிய குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகிறார்கள். பல சடலங்கள் மோசமான நிலையில் உள்ளதால் அதை பார்க்கும் உறவினர்கள் சிலர் வேதனையால் மயக்கமடைகிறார்கள். இந்த நிலையில் மண்ணில் புதைந்தவர்களில் 31 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கயத்தாறு பகுதியிலிருந்து இங்கு பணிக்கு வந்தவர்களே ஏராளம் என சொல்லப்படுகிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications