லாட்டரி முதல் பரிசு ரூ.25 கோடி.. மெகா ஓணம் பம்பர் ஆஃபர்.. சர்ப்ரைஸ் தந்த கேரளா.. செம எதிர்பார்ப்பு
ஓணம் பண்டிகையை ஒட்டி 25 கோடிக்கு லாட்டரி பரிசு அறிவித்துள்ளது கேரள அரசு
திருவனந்தபுரம்: வருகின்ற ஓணம் பண்டிகையினை முன்னிட்டு லாட்டரி ஆஃபராக 25 கோடி ரூபாயை கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் லாட்டரி விற்பனை சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இதன்காரணமாக லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது...
அம்மாநில அரசின் முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை உள்ளது... அதனால்தான், வாரம் முழுக்க லாட்டரி சீட்டு குலுக்கல் இங்கு நடைபெறும்..

லாட்டரி குலுக்கல்
இதுபோக, பண்டிகை காலங்களில் சிறப்பு லாட்டரி சீட்டுகள், அதிக பரிசு தொகையுடன் அறிவிக்கப்படுகின்றது.. அந்த வகையில், ஓணம் பம்பர், விஷு பம்பர், கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கல்கள் என விதவிதமான ஆஃபர்கள் உள்ளன. கடந்த வருடமும் இப்படித்தான், ஓணம் லாட்டரி 12 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த பரிசை இருவர் உரிமை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. டிஇ 645465 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூபாய் 12 கோடி என அறிவிக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவர்
ஆனால், அந்த லாட்டரி சீட்டுக்கு சொந்தம் கொண்டாடி சில மணிநேரங்கள் யாரும் வராததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, இறுதியில் ஆட்டோ ஓட்டுனரிடம் அந்த 12 கோடி பரிசு பணம் ஒப்படைக்கப்பட்டது.. அதேபோல, கேரளா விஷு புத்தாண்டு பண்டிகையை ஒட்டி அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. குலுக்கலில் 10 கோடி ரூபாய்க்கான பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை வைத்திருப்பவர் பரிசு அறிவித்து பல நாட்கள் ஆகியும் அதனைப் பெற யாருமே வரவில்லை.

ஓணம் பம்பர்
இந்தச் செய்தியும் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில் அந்த லாட்டரி டிக்கெட் வாங்கிய பிரதீப் என்ற நபர், தாமதமாக வந்து பரிசை பெற்று சென்றார்.. பரிசு விபரம் தங்களுக்கு தாமதமாகவே தெரிய வந்தது என்றும் திருவிழா, உறவினர் ஒருவரின் மரணம் எனப் பல காரணங்களால் இன்று தான் வர முடிந்தது எனவும் காரணம் தெரிவித்திருந்தார். இப்போது, இந்த ஆண்டுக்கான ஓணம் பம்பர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதிகபட்ச தொகையாக முதல் பரிசு ரூ.12 கோடி என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டின் பரிசு தொகையை ரூ.25 கோடியாக உயர்த்த லாட்டரி இயக்குனரகம், கேரள அரசுக்கு சிபாரிசு செய்தது.

கமிஷன் - வரிகள்
இதற்கு மாநில அரசும் அனுமதி அளித்தது... அதைத் தொடர்ந்து வருகின்ற ஓணம் பம்பர் லாட்டரி சீட்டின் முதல் பரிசாக ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு சீட்டு வருகிற 18-ந் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது... இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கேரள மாநிலத்தில் ஏற்படுத்தி வருகிறது.. பரிசு தொகை அதிகமானால், லாட்டரி விற்பனை செய்த ஏஜென்சிக்கு கமிஷன், வரிகள் என அனைத்தும் அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications