கைவிட்டு போன திருவனந்தபுரம்.. சசிதரூர் கூட ஒரு காரணம்தான்! அதிருப்தியில் காங்கிரஸ்
திருவனந்தபுரம்: வழக்கமாக கேரளாவில் இடதுசாரிகள் தோல்வியடைந்தால், அந்த இடத்தை காங்கிரஸ்தான் பிடிக்கும். ஆனால், வரலாற்றில் முதல் முறையாக தற்போது பாஜக அந்த இடத்தை பிடித்திருக்கிறது. குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக வென்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றிக்கு சசிதரூர் கூட ஒரு காரணம்தான் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமீப காலமாக பாஜகவுடன் சசிதரூர் அதீத நெருக்கம் காட்டி வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாராட்டி, மத்திய அரசை சசிதரூர் மிகப்பெருமையாக பேசியிருந்தார். பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடுக்கப்படும் பதிலடி தொடர்பான விஷயங்களில் அரசு எடுக்கும் நிலைப்பாட்டுக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சசிதரூர் தனது ஆதரவு குறித்து நியாயம் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் உட்பட, கட்சியின் தலைவர்கள் பலர் சசிதரூரை கடுமையாக விமர்சித்து இருந்தனர். ஆனால், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சசிதரூரை பாராட்டி இருந்தார்.
அதேபோல, சசிதரூர் பல்வேறு தருணங்களில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, அவரை பாராட்டி பேசி இருக்கிறார். நாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி மீதும் பாஜக மீதும், காங்கிரஸ் கடுமையாக விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருப்பதாக சசிதரூர் பாராட்டி வந்தார்.
அதேபோல ப்ராஜெக்ட் சிண்டிகேட் என்கிற சர்வதேச ஊடகத்திற்காக அவர் எழுதிய கட்டுரையில், வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு பெரிய அச்சுறுத்தல் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படி மேலோட்டமாக சொன்னால் கூட பரவாயில்லை, நேரு, காந்தி குடும்பம் உட்பட பல காங்கிரஸ் குடும்பங்களை குறிப்பிட்டு அவர் விமர்சித்திருந்ததால் கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. மறுபுறம் சசிதரூருக்கு சப்போர்ட் செய்து, அவரின் விமர்சனத்தை பாஜக வரவேற்று இருந்தது.
இதற்கெல்லாம் உச்சமாக, 1975-77 எமர்ஜென்சி காலத்தை இரண்டு காலம் என்று சசிதரூர் கூறியிருந்தார். வழக்கமாக பாஜகதான் இந்த விமர்சனத்தை முன்வைக்கும். ஆனால், பாஜகவின் குரலாக சசிதரூர் இவ்வாறு பேசியிருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுத்தன. ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை புறக்கணிப்பது, மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது போன்றவை சசிதரூருக்கு எதிரான வலுவான குற்றச்சாட்டாக இருக்கிறது.
இப்படி இருக்கையில், திருவனந்தபுரத்தில் பாஜகவின் வெற்றி காங்கிரசை சுய பரிசீலனைக்கு தள்ளி இருக்கிறது. சசிதரூரின் நடவடிக்கைகள் இந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று காங்கிரஸ் நிச்சயம் கூறும். இப்படி ஒரு சூழல் வரும் நிலையில், சசிதரூர் பாஜகவுக்கு கட்சி தவலாம். இப்படி கட்சி தாவுவதால் அடுத்த மக்களவை தேர்தலுக்கு போட்டியிட பாஜக சசிதரூருக்கு வாய்ப்பு வழங்கும். அல்லது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புகளை வழங்கலாம்.
சுருக்கமாக கூறுவதெனில், திருவனந்தபுரம் எம்பியாக இருந்துக்கொண்டு, காங்கிரஸ் வெற்றிப்பெற உள்ளாட்சி தேர்தலில் சசிதரூர் போதிய வேலை செய்யவில்லை. இதனால் இடதுசாரிகளும், காங்கிரஸும் ஒன்றுதான் என்று மக்கள் நம்பினர். இதுவே பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்ற முக்கிய காரணமாக மாறியது.
-
கேரளாவின் ‘தோழன்’ பினராயி.. வங்கத்துச் 'சிங்கம்' மம்தா.. மீண்டும் வெல்வார்களா? களம் எப்படி இருக்கு? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications