கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி 93 முதல் 111 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு.. டுடேஸ் சாணக்யா
திருவனந்தபுரம்: டுடேஸ் சாணக்யா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி 93 முதல் 111 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் இடதுசாரிகளே வென்று ஆட்சியமைப்பார்கள் என தேர்தலுக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்லியுள்ளன.
பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியை தக்ககைப்பார்கள் என்று டுடேஸ் சாணக்யா நடத்திய கணிப்புகள் தெரிவிக்கின்றன.
டுடேஸ் சாணக்யா கணிப்பின்படி, கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரிகள் கூட்டணி: 93-111 இடங்கள் பெறும் என கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்: டிஎம்சி 158, பாஜக 115, காங். அணி 19, இதர 2 - டைம்ஸ் நவ் சி வோட்டர் எக்ஸிட் போல்
காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி 26-44 இடங்களில் வெல்லும் என கணித்துள்ளது டுடேஸ் சாணக்யா. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 0-6 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும். இதர கட்சிகள் 0-3 இடங்களில் வெல்லக்கூடும் என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியா டுடே, ஏபிசி, சிவோட்டர்ஸ் மற்றும் ரிபப்ளிக் டிவி ஆகிய மூன்று கணிப்புகளிலும் இடதுசாரிகளே ஆட்சியை தக்க வைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.