திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் செய்த காரியம் .. அதிர்ந்த கேரளா.. பெரும் சோகம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் மயக்க ஊசி செலுத்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான 5 மாதத்தில் இளம் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெள்ளநாடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் நாயர். இவருடைய மகள் அபிராமிக்கு 30 வயது ஆகிறது. இவர் முதுநிலை டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். டாக்டர் அபிராமி திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

கொல்லம்ராமன் குளங்கரையை சேர்ந்த டாக்டர் பிரதீஷ் ரகு என்பவருக்கும், டாக்டர் அபிராமிக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் நிச்சயப்படி திருமணம் நடந்தது. பிரதீஷ் ரகு மும்பையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். டாக்டர் அபிராமி திருமணத்துக்கு பின்பு திருவனந்தபுரம் பி.டி.சாக்கோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபடி அரசு மருத்துவமனைக்கு தினமும் சென்று வந்தார்.
இந்தநிலையில் கடந்த மார்ச் 26ம் தேதி மதியம் பணியில் இருந்த அபிராமி அறைக்கு சாப்பிட சென்றுள்ளார். பின்னர் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. அவர் பணிக்கு வராததால் அவருடன் பணிபுரிந்து வந்த சக டாக்டர்கள் அவரது அறைக்கு வந்து கதவை தட்டியுள்ளார்கள் ஆனால் உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு அபிராமி படுக்கையில் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
உடனே டாக்டர் அபிராமியை மீட்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அபிராமி ஏற்கனவே இறந்து விட்டதை கண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
தொடர்ந்து அபிராமி தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது அறையில் பயன்படுத்தப்பட்ட ஊசி கிடந்தது. விசாரணையில் அவர் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் உடலில் செலுத்தி உயிரை மாய்த்து கொண்டதை கண்டுபிடித்தனர்.
மேலும் அபிராமி எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அதில், 'எனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. வாழ விரும்பவில்லை. போகிறேன்' என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.. அபிராமி தினமும் மாலை 3 மணிக்கு பெற்றோரிடம் செல்போனில் பேசுவாராம். அதன்படி கடந்த மார்ச் 26ம் தேதி அன்று பிற்பகல் 3 மணி அளவில் பெற்றோரிடம் பேசியிருக்கிறார். அப்போது சகஜமாக தங்களிடம் மகள் பேசியதாகவும் அதற்கு பின்பு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் அபிராமியின் பெற்றோர் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் டாக்டரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications