'இந்து ஐஏஎஸ் அதிகாரிகள்' வாட்ஸ்அப் குரூப்.. சர்ச்சையில் சிக்கிய 2 ஐஏஎஸ் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?
திருவனந்தபுரம்: கேரளாவில் இந்து ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் உருவாக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி உட்பட இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதம் மற்றும் ஜாதி ரீதியான எந்தவித செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்பது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பொதுவான விதி. ஆனால், தீபாவளி சமயத்தில் கேரளத்தில் ஐஏஎஸ் இந்து அதிகாரிகள் என்ற வாட்ஸ் அப் குரூப் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த குரூப்பில் ஜூனியர்கள் முதல் மூத்த அதிகாரிகள் வரை பல இந்து அதிகாரிகள் இடம்பெற்றிருந்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரளத்தில் தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குநராக உள்ள கோபால கிருஷ்ணன் என்ற ஐஏஎஸ் அதிகாரிதான் அந்த வாட்ஸ் அப்பின் அட்மினாக உள்ளதாக பெயர் அடிபட்டது.
ஐஏஎஸ் அதிகாரியான கோபால கிருஷ்ணன் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். 2013 ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியான கோபால கிருஷ்ணன், திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியராகவும் தேசிய சுகாதர திட்டத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவில் சர்வீஸ் அதிகாரிகளே மத ரீதியாக தனி குழு அமைத்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த வாட்ஸ் அப் குழுவை தான் துவங்கவில்லை என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், தன்னுடைய செல்போன் மூலம் மலையாளி இந்து அதிகாரிகள் மற்றும் மலையாளி முஸ்லீம் அதிகாரிகள் என்ற வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டு இருப்பதாக எனது நண்பர் கூறினார்.
என்னுடைய செல்போன் எண் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக பேசியிருந்த அமைச்சர் ராஜீவ், மத அடிப்படையிலான பிளவு ஏற்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியது.
இச்சம்பவம் குறித்து கேரள அரசு உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு என சில நடத்தை விதிகள் உள்ளன என்றார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு உயர்மட்ட விசராணை மேற்கொண்டது. விசாரணையில் வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஐஏஎஸ் அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன் மற்றும் என்.பிரசாந்த் ஆகிய இரண்டு அதிகாரிகளை கேரள அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications