Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயநாட்டில் சொல்லியடித்த பிரியங்கா காந்தி.. முதல் தேர்தலிலேயே ராகுலை முந்தி சாதனை

Subscribe to Oneindia Tamil

வயநாடு: வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சிட்டிங் எம்பியாக இருந்த காங்கிரஸ் ராகுல் காந்தி பதவி விலகிய நிலையில், அவருக்கு பதிலாக பிரியங்கா காந்தி களமிறங்கினார். களம் கண்ட முதல் தேர்தலிலேயே வயநாட்டில் தன் அண்ணன் ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் வாங்கி பிரியங்கா சாதனை படைத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், வயநாடு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார்.

election results 2024 wayanad by election results priyanka gandhi

ராகுல் பதவி விலகியதால் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 62.92 சதவீதம் வாக்கு பதிவானது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மூன்று கட்சிகளுமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

வயநாடு மக்களவை தொகுதியில், மானந்தவாடி, சுல்தான்பத்தேரி, கல்பெட்டா, திருவம்பாடி, எர்நாடு, நிலம்பூர், வண்டூர்ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். வயநாடு காங்கிரஸ் கட்சியின் கோட்டை. அந்த தொகுதியை தக்க வைப்பது காங்கிரஸ் கட்சிக்கு கௌரவ பிரச்னை.

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தின் முக்கிய முகமாக பிரியங்கா காந்தியும் இருப்பதால், அங்கு மிகப்பெரிய வெற்றியுடன் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். கடந்த இரண்டு தேர்தல்களில் ராகுல் காந்தி வாங்கிய வாக்குகளை விட பிரியங்கா அதிக வாக்குகள் வாங்க வேண்டும் என வியூகம் அமைத்தனர்.

வருகிற 2026 ஆம் ஆண்டு கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. சிபிஎம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் உள்ள நிலையில், ஆங்காங்கே அதிருப்தியும் எழத்தொடங்கியிருக்கிறது. அதனால் 2026 கேரளாவில் ஆட்சியமைப்பதற்கான அஸ்திவாரத்தை வயநாட்டில் இருந்து அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டார். அப்போது சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை (64 சதவீதம்) பெற்றார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி. 6.47 லட்சம் வாக்குகள் (59 சதவீதம்) வாக்குகளை பெற்றார்.

2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் ராகுலின் வாக்கு சுமார் 5 சதவீதம் குறைந்துள்ளது. காரணம் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக ராகுலுக்கு வலுவான போட்டி கொடுத்தனர். கடந்த தேர்தலில் ராகுல் காந்தி 3,61,705 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் கடந்த தேர்தலில் ராகுல் காந்தி வாங்கிய வாக்கை விட பிரியங்கா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு சதவீதம் அடிப்படையில் பிரியங்கா காந்தி 64.99 சதவீதம் வாக்குகளை பெற்றார். இது 2019, 2024 தேர்தல்களில் ராகுல் காந்தி பெற்றதை விட அதிக வாக்குகளாகும்.

பிரியங்கா காந்தி முதல்முறையாக இப்போதுதான் தேர்தலில் போட்டியிடுகிறார். முதல் தேர்தலிலேயே தன் அண்ணன் ராகுலின் சாதனையை முறியடித்திருப்பதை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வயநாடு தொகுதியில் 7 சதவீதம் வாக்குகளை பெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 13 சதவீதம் வாக்குகளை பெற்றது. தற்போது பாஜக 11 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட ஆனி ராஜா 26 சதவீதம் வாக்குகளை பெற்றார். தற்போது கம்யூனிஸ்ட்களின் வாக்கு குறைந்து 22 சதவீதமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+