ரத்த வெள்ளத்தில் மிதந்த இஸ்ரோ விஞ்ஞானி.. கொலைக்கான காரணம் இதுதானா? கொலையாளி வாக்குமூலம்
Recommended Video
திருவனந்தபுரம்: தன் பாலின உறவு வைத்துக் கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் குமார், அதற்கு பேசிய படி பணம் தராததால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவை சேர்ந்தவர் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் குமார் (56). 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இவர் ஹைதராபாத் அமீர்பேட்டை அன்னப்பூர்ணா குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரது மனைவி இந்திரா சென்னையில் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுரேஷ் பணிக்கு வரவில்லை. இதனால் அவருடன் வேலை செய்பவர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவே இல்லை.

சுரேஷ்
இதையடுத்து அவரது மனைவிக்கு தகவல் கொடுத்தனர். சுரேஷ் வசிக்கும் குடியிருப்பில் அவரது உறவினர்கள் இருப்பதால் அவர்களுக்கு நடந்தவற்றை இந்திரா தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் சுரேஷ் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

ஆத்திரம்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்துக்காக விஞ்ஞானி சுரேஷுடன் தன்பாலின உறவில் ஈடுபட்டேன். ஆனால் சுரேஷோ வேலை முடிந்தவுடன் பணம் தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்து அவரை கொன்றேன் என்றார்.

ஆசை வார்த்தை
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ஆய்வக உதவியாளரான ஸ்ரீனிவாஸ் ரத்த மாதிரிகளை சேகரிக்க விஞ்ஞானி சுரேஷ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருடன் தன்பாலின உறவை எதிர்பார்த்த சுரேஷ், தன்னுடன் உறவு கொண்டால் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

குற்றவாளி
ஆனால் சுரேஷோ பேசியபடி பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால்தான் ஸ்ரீனிவாஸ், சுரேஷை கொன்றுள்ளார். குற்றவாளி ஸ்ரீனிவாஸ் வீட்டில் தங்க மோதிரம், ரூ 10 ஆயிரம் பணம், மொபைல் போன் ஆகியவற்றை கைப்பற்றினோம்.

கழுத்து அறுத்து
கதவை வெளிப்பக்கமாக பூட்டிக் கொண்டு சென்றது இந்த கொலையில் முக்கிய ஆதாரம். கடந்த 1-ஆம் தேதி பணம் தராத சுரேஷுடன் வாக்குவாதம் செய்தபின்னர் அவரது கழுத்தை அறுத்து கொன்றுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications