எமனாக மாறிய பரோட்டா.. ஆசையாக சாப்பிட்ட மாணவிக்கு கடும் பாதிப்பு.. துடிதுடித்து பலியான சோகம்..! பரபர
பரோட்டா சாப்பிட்டதில் இளம் பெண் கேரளாவில் மரணமடைந்துள்ளார்.
திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் பரோட்டா சாப்பிட்டதால் பிளஸ் 1 மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.. பரோட்டா உடல்நலனுக்குக் கெடு என்று தெரிந்தும் கூட பலரும் அதைத் தொடர்ந்து சாப்பிடுவதாலேயே இதுபோன்ற சம்பங்கள் நடக்கின்றன.
இங்கு மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுகள் காரணமாகப் பலரது உடல்நிலையும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இவை நமக்கு நீரிழிவு தொடங்கிப் பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதையே மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும், பெரும்பாலானோர் இதை கடைப்பிடிப்பது இல்லை.

பரோட்டா
இதன் காரணமாகப் பல நேரங்களில் நமக்குப் பல விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது.. பரோட்டா என்றாலே அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும். தமிழ்நாட்டில் பெரும்பாலான உணவுகளில் இரவு நேரங்களில் பரோட்டா தான் பிரதான உணவாக இகுக்கும். பரோட்டா சாப்பிட்டால் வயிறு நன்கு நிரம்பிய ஒரு உணர்வு கிடைக்கும் என்பதால் பரோட்டா சாப்பிடவே பலரும் விரும்புவார்கள். இருப்பினும், பரோட்டா உடல்நலனுக்கு கெடு விளைவிக்கும் என்பதால் அதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறார்கள்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள் ஏன் அப்படி அறிவுறுத்துகிறார்கள் என்பதை விளக்கும் வகையிலான சம்பவம் தான் கேரளாவில் இப்போது நடந்துள்ளது. கேரளாவில் பரோட்டா ரொம்பவே பிரபல உணவாகும். அதே பரோட்டாவை சாப்பிட்டுத் தான் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். பரோட்டா சாப்பிட்டதில் ஏற்பட்ட உணவு அலர்ஜி காரணமாக அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாழத்தோப்பு என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கேரளா
அங்கு வாழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிஜு கேப்ரியல் என்பவரின் மகள் நயன்மரியா (16). இவர் அங்குள்ள செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு பரோட்டா சாப்பிட்டுள்ளார். இதனால் அவரது உடலில் எதிர்பாராத சில அலர்ஜி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிய பெற்றோர், அந்த மாணவியை இடுக்கி மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

அலர்ஜி
நயன்மரியாவுக்கு மைதா மற்றும் கோதுமையில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிடும் போதெல்லாம் அலர்ஜி ஏற்பட்டதாக அவரது நெருங்கி நண்பர் வட்டாரங்கள் கூறுகின்றனர். இருப்பினும், கொஞ்சக் காலமாக இதில் அவரது உடல்நிலை முன்னேறியுள்ளது. மைதா மற்றும் கோதுமை பொருட்களைச் சாப்பிடும்போது அவரது உடலில் ஏற்படும் அலர்ஜி சற்று குறைந்துள்ளது இதனால் நயன்மரியா கடந்த சில காலமாக அதிகப்படியான மைதாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார்,

உயிரிழப்பு
இதுவே அவருக்கு இப்போது எமனாக மாறிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு பரோடாட்டா சாப்பிட்டுள்ளார். இருப்பினும், மறுநாளே இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது உடலில் சில மோசமான அறிகுறிகளும் தெரிய தொடங்கியுள்ளது. இதையடுத்து, அவர் இடுக்கு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.. அங்கு அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் எதிர்பாராத விதமாக நேற்று மதியம் உயிரிழந்தார்.

மைதா
மைதா சாப்பிடுவது நமது கெட்ட கொழுப்பை (LDL) அதிகரிக்கிறது.. இது நமது உடலில் கொழுப்பை அதிகரிக்கவே செய்கிறது. நமது உடலில் இருக்கும் தமனிகளை அடைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.. மேலும், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை அலவையும் சீர்குலைக்கிறது.. மேலும், இது எப்போதும் நம்மைப் பசியுடன் வைத்திருக்கிறது.. மைதாவால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து முழுமையாக அறியாததாலேயே இதை மக்கள் அதிகப்படியாகச் சாப்பிடுகிறார்கள். மைதாவால் செய்யப்பட்ட பானி பூரி, சீஸ் கேக், பாஸ்தா, நூடுல்ஸ் மற்றும் பீட்சா போன்றவற்றைச் சாப்பிடுவதால் நமது உடல் எடையும் கடுமையாக அதிகரிக்கிறது.

தவிர்க்க வேண்டும்
மருத்துவர்கள் அனைவருமே மைதாவில் இருந்து செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றே சொல்லி வருகிறார்கள்.. மைதா மோசமானது என்று சொல்வது எளிது.. ஆனால் மைதாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. மேலும் மைதாவில் இருந்து செய்யப்படும் உணவுகள் சுவையாக இருப்பதால், அதை முற்றிலுமாக சாப்பிடாமல் இருப்பது கடினமாகவே இருக்கிறது. எனவே, முற்றிலும் மைதாவை கைவிட முடியவில்லை என்றாலும் முடிந்தவரைக் குறைக்கப் பாருங்கள்.. உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் அதிகம் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications