ஒரு மழைக்கே தாங்கலையே.. உள்ளே நீர் சொட்ட சொட்ட பயணம்.. வந்தே பாரத் ரயிலில் போன பயணிகளுக்கு ஷாக்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடங்கி வைக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயிலில் நேற்று முதல்நாள் மழையில் நீர் ஒழுகிய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 நாட்களுக்கு முன் கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை இயக்கப்படும்.

ஆனால் இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்ல 8 மணி நேரம் 5 நிமிடங்கள் ஆகும். முதல் நாள் பயணத்தில் இது சரியாக 8 மணி நேரம் 5 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டது. கிட்டத்தட்ட 68 கிமீ வேகத்தில்தான் இந்த ரயில் பயணம் செய்தது.

இந்த ரயிலில் சென்றால் விரைவாக சென்றுவிட முடியும் என்று நினைத்த பயணிகள் பலரும் பயண நேரத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Why Trivandrum to Kasargod Vande Bharat Train is leaking for a small train itself?

கூடுதல் அதிர்ச்சி: கூடுதல் அதிர்ச்சியாக கேரளாவில் தொடங்கி வைக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயிலில் நேற்று முதல்நாள் மழையில் நீர் ஒழுகிய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் ரயிலின் மேல் பாகத்தில் இருந்து இப்படி நீர் ஒழுகி உள்ளது. மழை காரணமாக உள்ளே நீர் வந்து உள்ளது. ரயிலின் executive கோச்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் கண்ணூர் வந்ததும் அதன் சீலிங்கில் இருக்கும் விரிசல் சரி செய்யப்பட்டு உடனே மாற்றப்பட்டது.

இந்த பாதிப்பால் ரயில் சேவை பாதைக்கப்படவில்லை. அதே சமயம் ரயிலில் நீர் ஒழுகிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

Why Trivandrum to Kasargod Vande Bharat Train is leaking for a small train itself?

தாமதம்: முன்னதாக சோதனை ஓட்டத்திலேயே இந்த ரயில் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது. திருவனந்தபுரம் - கன்னூர் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்திலேயே 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளது. திருவனந்தபுரம் - கன்னூர் வந்தே பாரத் ரயில் 7. 20 மணி நேரத்தில் திருவனந்தபுரம் ஸ்டேஷனில் இருந்து கன்னூர் வந்தே பாரத் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது .

இந்த ரயில் வெறும் 70 கிமீ வேகத்தில்தான் பயணம் செய்துள்ளது. கன்னூரில் பிற்பகல் 2.10க்கு தொடங்கி இரவு 9.30 மணிக்குத்தான் இந்த ரயில் திருவனந்தபுரம் வந்துள்ளது.

சராசரியாக இரண்டு இடங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் ரயில் பயணத்தை விட இது 10 நிமிடம் அதிகம் ஆகும். வந்தே பாரத் ரயில் இப்படி முதல் நாள் சோதனை ஓட்டத்திலேயே 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளது.

அதன்பின் நேற்று முதல் பயணத்திலும் ரயில் தாமதமாக சென்றது.

Why Trivandrum to Kasargod Vande Bharat Train is leaking for a small train itself?

வரவேற்பு: சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.

அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+