அசிங்கம்! மனைவிகளை மாற்றி உடலுறவு.. புகார் அளித்த பெண் கொடூர கொலை.. கணவர் வீட்டில் காத்திருந்த ஷாக்!
திருவனந்தபுரம் : கேரளாவில் மனைவிகளை மாற்றி உறவு கொண்டது தொடர்பாக புகார் அளித்த பெண் 2 வருடங்களுக்குப் பிறகு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த புகார் அப்போது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 32 வயதான அந்தப் பெண் அளித்த புகாரில், தனது கணவர் தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக குற்றம்சாட்டி இருந்தார்.

கேரளாவை அதிரவைத்த புகார் : ஷினோ மேத்யூ என்பவர் மீது அவரது மனைவியான இளம்பெண் கடந்த 2020ஆம் ஆண்டு அளித்த புகாரில், தனக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், நன்றாகச் சென்றுகொண்டிருந்த உறவில் ஒரு சமூக வலைதள குழுவால் மோசமான சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அப்பெண்ணின் கணவர் சமூக வலைதளத்தில் உள்ள ஒரு குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். அந்த குழுவில் இருப்பவர்கள் அடிக்கடி குடும்பத்துடன் சந்தித்து கொள்வார்கள். அப்போது குழுவில் உள்ளவர்கள் ஜோடிகளை மாற்றிக்கொண்டு உறவு கொள்வார்கள். அதாவது, குழுவில் இருக்கும் ஆண்கள், தங்கள் மனைவியரை மாற்றி உறவு வைத்துக் கொள்வார்கள்.
மனைவிகளை மாற்றி உல்லாசம் : அப்படி, இந்த புகார் அளித்த பெண்ணை, அவரது கணவர் ஷினோ மேத்யூ, அந்தக் குழுவினரின் சந்திப்புக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்களுடன் தனது மனைவியை உறவு கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார் ஷினோ மேத்யூ. இது தனக்கு பிடிக்கவில்லை எனக்கூறிய பின்னரும் கட்டாயப்படுத்தி உறவு கொள்ளச் செய்துள்ளார்.
இதனால் அப்பெண் சிலருடன் கட்டாய உறவில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து, அப்பெண் தனக்கு தொல்லை தரும் கணவர் மற்றும் அந்த பார்ட்னர் ஸ்வாப்பிங் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார்.

ரகசிய விசாரணை : போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் கணவர் உட்பட 7 பேர் தங்களது மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டு வந்ததையும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததையும் கேட்டு அதிர்ந்தனர்.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் என 7 பேரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கலாச்சாரத்தில் இவர்களுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கொடூர கொலை : இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். 2 ஆண்டுகள் கழிந்த நிலையில், அதிர்ச்சி சம்பவமாக புகார் அளித்த அந்தப் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
பார்ட்னர் ஸ்வாப்பிங் குழு பற்றி போலீசில் புகார் கொடுத்த பெண், கணவரை பிரிந்து கோட்டயம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். நேற்று அவரது வீடு நீண்ட நேரமாக பூட்டிக்கிடந்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு அந்த பெண் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அதிர்ச்சி : இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்த பெண்ணின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அந்த பெண்ணை கொலை செய்தவர்கள் யார் என்பது பற்றி விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே அந்தப் பெண்ணின் உறவினர்களும் அங்கே வந்தனர். அவர்கள், பெண்ணை கொலை செய்தது, அவரது கணவர் தான் என்றும், அவரை உடனே கைது செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் கூறினர். இதையடுத்து போலீசார், பெண்ணின் கணவரை தேடி அவர் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர்.
கணவர் தற்கொலை முயற்சி : அங்கு அவரது கணவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தன்னையும், நண்பர்களையும் போலீசில் சிக்க வைத்த தனது மனைவியை பழிவாங்கவே ஷினோ மேத்யூ அவரை கொலை செய்திருக்கலாம் என்றும், பின்னர் போலீஸிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவரும் விஷம் குடித்துள்ளார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications