உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி.. புதிய திட்டங்கள் வளர்ச்சியை வேகப்படுத்தும்.. கேரளாவில் பிரதமர் மோடி
திருவனந்தபுரம்: கேரளாவில் சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்பிலான சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இவை நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்திருந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர்ஜுன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைத்தார். அதேபோல விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணி அளவில் தனி விமானம் மூலம் கேரளா சென்றார். கொச்சியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்குச் சொந்தமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதுதவிர பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "உங்களுடன் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று கேரளா மற்றும் இந்தியாவின் வளர்ச்சியைக் கொண்டாட நாம் இங்கு வந்துள்ளோம். பல வளர்ச்சி திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை சேதத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்" என்றார்.
கேரளாவில் சுற்றுலா துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கொச்சியில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள உள்ள சர்வதேச கப்பல் முனையம் மாநிலத்தின் சுற்றுலா துறையை நிச்சயம் மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications