கொடுமை.. விரட்டிய தெருநாய்கள்.. பயந்து ஓடிய 38 வயது பெண்.. லாரியில் சிக்கி பலி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தெருநாய்களுக்கு பயந்து ஓடிய பெண் மீது லாரி மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரளாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Recommended Video

    உரிமையாளரை கடித்துக் கொன்ற பிட்புல் இன நாய்.. உத்திரப்பிரதேசத்தில் நடந்த கொடூரம் - வீடியோ

    என்னதான் நன்றியுள்ள ஜீவன் என நாம், நாய்களை கூறினாலும், சில நேரங்களில் மனிதர்களின் உயிருக்கு அவை எமனாகி விடுகின்றன. வீட்டில் வளர்க்கும் சில வெளிநாட்டு ரக நாய்கள் அவற்றின் உரிமையாளர்களை கடித்துக் கொன்ற சம்பவங்கள் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். வீட்டில் வளர்க்கும் சில நாய்கள் தான் இப்படி என்றால், தெருநாய்களின் தொல்லையை பற்றி சொல்லவே தேவையில்லை.

     Woman Dies In An Accident After Dogs Chasing Her In Kerala

    இரவு நேரங்களில் வரும் வாகனங்களை துரத்துவது, வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் கடிப்பது என தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகளை நாம் நிச்சயம் எதிர்கொண்டிருப்போம். சில சமயங்களில் நாய்கள் துரத்தும் போது வண்டியில் இருந்து கீழே விழுந்தும், எதிரே வந்த வாகனங்களில் மோதியும் பலரும் உயிரிழந்துள்ளனர். தெருநாய்களுக்கு பயந்தே சிலர் இரவு நேரங்களில் வீடு திரும்பாமல் அலுவலகங்களில் தங்கியிருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.

    இப்படிப்பட்ட தெருநாய்களால் கேரளாவில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள தாமரச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சஜிதா (38). இவர் தனது மகன் மற்றும் மகளை தெருமுனையில் நிற்கும் பள்ளி வாகனத்தில் கொண்டு சென்று ஏற்றுவது வழக்கம். அந்த வகையில், இன்று காலை சஜிதா தனது பிள்ளைகளை பள்ளி வாகனத்தில் ஏற்ற சென்றிருக்கிறார்.

    பின்னர் அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது அங்கிருந்த 5 தெருநாய்கள் அவரை பின்தொடர்ந்து வந்திருக்கின்றன. இதனால் பயந்து பயந்து சஜிதா சென்றிருக்கிறார். ஒருகட்டத்தில், அவை குரைத்தபடி சஜிதாவை கடிக்க வந்துள்ளன. இதனால் பயந்துபோன அவர் வேகமாக ஓட தொடங்கினார். ஆனால் நாய்களும் அவரை விடாமல் துரத்தியுள்ளன. வேகமாக ஓடியதால் திடீரென நிலைத்தடுமாறி சஜிதா சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்த லாரி அவர் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த சஜிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தாய் இறந்தது தெரியாமல் அவரது பிள்ளைகள் பள்ளிக்கு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் தாயார் இறந்த தகவல் அவர்களுக்கு கூறப்பட்டது. இதையடுத்து, வீட்டுக்கு வந்த பிள்ளைகள் தாயின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரின் கண்களை கலங்கச் செய்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+