வீட்ல ஏன் சரக்கு இல்லை.. எகிறி எகிறி.. என்னா அடி.. அப்பாவை உதைத்த குடிகார மகன்.. வைரல் வீடியோ
Recommended Video
திருவனந்தபுரம்: என்னா அடி.. எகிறி எகிறி.. தன் அப்பாவை சரமாரியாக உதைத்த குடிகார மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலானது. இந்த வீடியோ அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்களின் வாட்ஸ்-அப்களில் நிறைய ஷேர் செய்யப்பட்டது.
அதில், இளைஞர் ஒருவர், தன்னுடைய அப்பாவை காலால் எட்டி உதைத்து அடிக்கிறார். அப்போது, இளைஞரின் அம்மாவும், பக்கத்து வீட்டுக்காரர்களும் குறுக்கே புகுந்து மகனை சமாதானப்படுத்த முயல்கிறார்கள்.

வயதான தந்தை
ஆனாலும் மகன் அவர்களை கண்டுக்கவே இல்லை. திரும்ப திரும்ப தன் அப்பாவையே முரட்டுதனமாக அடித்து நொறுக்குகிறார். கடைசியில் அந்த வயதான தந்தை மகனிடம் மன்னிப்பு கேட்கிறார். இப்படி முடிகிறது அந்த வீடியோ.

அதிர்ச்சி
இதை பார்த்த பலரும் அதிர்ச்சியாகி விட்டனர். யார் இவர்? எதற்காக அப்பாவை போட்டு இப்படி அடிக்கிறார் என்ற அதிர்ச்சி கேள்வி எழுந்தது. அதனால், இந்த வீடியோ காட்சி பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளே போலீசாரை கேட்டுக் கொண்டனர். அதன்படி விசாரணையும் ஆரம்பமானது.

மதுப்பழக்கம்
அதன்படி, சம்பந்தப்பட்டவர்கள், மாவேலிக்கரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மகன் பெயர் ரெவிஸ், வயது 29 என்றும் தெரியவந்தது. ரெவிசுக்கு சின்ன வயசில் இருந்தே தண்ணி அடிக்கிற பழக்கம் உண்டாம். வேலை வெட்டிக்கு போகாமல், எந்நேரமும் பாட்டிலும் கையுமாகவே சுற்றி வந்துள்ளார்.

காலி பாட்டில்
ஒருநாள் மதுபாட்டிலை வாங்கி வந்து வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து உள்ளார். இந்த பாட்டிலைதான் ரெவிசின் அப்பா பார்த்துள்ளார். ரெவிஸ் வெளியே போனதும், அதை எடுத்து இவர் குடித்துவிட்டார். திரும்பி வந்து பார்த்த ரெவிஸ், பாட்டில் காலியாக இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்துவிட்டார்.

கைது
அந்த ஆத்திரம் தாங்காமல்தான் அப்பாவை எட்டி எட்டி உதைத்து தாக்கிஉள்ளார். இதை அக்கம்பக்கத்தினர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த தகவல்கள் எல்லாம் விசாரணையில் கிடைத்ததையடுத்து, மாவேலிக்கரை போலீசார், ரெவிஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்பாவை மகன் சரமாரியாக தாக்கும் இந்த வீடியோவையும் சோஷியல் மீடியாவில் இருந்து நீக்கம் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications