இப்ப சபரிமலை போக பிளான் பண்றீங்களா.. வரலாறு காணாத கூட்டம்.. ஒரு நிமிஷம் இந்த வீடியோ பாருங்க
சபரிமலை: சபரிமலை சுவாமி ஐயப்பனை தரிசிக்க பலரும் மாலை அணிந்து விரதம் இருந்து இப்போது சென்று வருகிறார்கள். ஆனால் அங்கு வழக்கத்தை விட மிகமிக அதிக அளவில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதுகிறது. மூச்சை முட்டும் அளவிற்கு பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. பம்பையில் கால் வைக்கும் இடம் எல்லாம் மனித தலைகளால் நிரம்பி இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
சபரிமலைக்கு கார்த்திகை மார்கழி மாதங்களிலும் மற்றும் தை முதல் வாரம் வரை பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள்.. கடந்த சில ஆண்டுகளாக சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிக்கல் இருந்தது. இந்த முறை எந்த கட்டுப்பாடும் இல்லை. முன்னதாக இவ்வளவு பக்தர்கள் தான் போக முடியும் என்றும், அவர்கள் போவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. இந்த முறை அப்படி இல்லை..

ஆன் ஸ்பாட்டில் ஆன்லைனில் புக் செய்து அப்படியே போக முடியும். பக்தர்களை கட்டுக்கடங்காமல் தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. இதன் காரணமாக வரலாறு காணாத கூட்டம் பம்பையில் இருக்கிறது. சபரிமலைக்கு செல்லும் எல்லா பாதைகளும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது. சபரிமலையில் பல மணி நேரம் மூச்சுத்திணறலுக்கு நடுவில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க காத்துக்கிடக்கிறார்கள்.
சபரிமலை முதல் பம்பை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்ற கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.அதேபோல் பம்பையில் கால் வைப்பதற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. சபரிமலையில் சுமார் 18 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு தரிசன நேரம் அதிகரிப்பு, வரிசை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருந்தாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காத வகையில் இருப்பதால், கையை பிசையும் நிலையில் தான் நிலைமை இருக்கிறதாம்.
கடந்த 3 நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிகவும் கட்டுக் கடங்காத வகையில் உள்ளதால் பம்பையிலேயே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மலையேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். பதினெட்டாம் வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 முதல் 85 பேர் வரை செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்து வருகிறார்கள்.
கோவில் நடை திறக்கப்பட்ட 25 நாட்களில் 16 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தினமும் 90ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வரலாறு காணாத கூட்டம் குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பாருங்கள்..
#Sabarimala TODAY CROWD AT PAMBA. Worst situation of devotees. pic.twitter.com/UaZyZGIrYm
— BK ASTROLOGY (@bala8882) December 12, 2023
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications