இப்ப சபரிமலை போக பிளான் பண்றீங்களா.. வரலாறு காணாத கூட்டம்.. ஒரு நிமிஷம் இந்த வீடியோ பாருங்க
சபரிமலை: சபரிமலை சுவாமி ஐயப்பனை தரிசிக்க பலரும் மாலை அணிந்து விரதம் இருந்து இப்போது சென்று வருகிறார்கள். ஆனால் அங்கு வழக்கத்தை விட மிகமிக அதிக அளவில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதுகிறது. மூச்சை முட்டும் அளவிற்கு பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. பம்பையில் கால் வைக்கும் இடம் எல்லாம் மனித தலைகளால் நிரம்பி இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
சபரிமலைக்கு கார்த்திகை மார்கழி மாதங்களிலும் மற்றும் தை முதல் வாரம் வரை பக்தர்கள் விரதம் இருந்து செல்வார்கள்.. கடந்த சில ஆண்டுகளாக சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிக்கல் இருந்தது. இந்த முறை எந்த கட்டுப்பாடும் இல்லை. முன்னதாக இவ்வளவு பக்தர்கள் தான் போக முடியும் என்றும், அவர்கள் போவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. இந்த முறை அப்படி இல்லை..

ஆன் ஸ்பாட்டில் ஆன்லைனில் புக் செய்து அப்படியே போக முடியும். பக்தர்களை கட்டுக்கடங்காமல் தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. இதன் காரணமாக வரலாறு காணாத கூட்டம் பம்பையில் இருக்கிறது. சபரிமலைக்கு செல்லும் எல்லா பாதைகளும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது. சபரிமலையில் பல மணி நேரம் மூச்சுத்திணறலுக்கு நடுவில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க காத்துக்கிடக்கிறார்கள்.
சபரிமலை முதல் பம்பை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்ற கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.அதேபோல் பம்பையில் கால் வைப்பதற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. சபரிமலையில் சுமார் 18 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு தரிசன நேரம் அதிகரிப்பு, வரிசை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருந்தாலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காத வகையில் இருப்பதால், கையை பிசையும் நிலையில் தான் நிலைமை இருக்கிறதாம்.
கடந்த 3 நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிகவும் கட்டுக் கடங்காத வகையில் உள்ளதால் பம்பையிலேயே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மலையேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். பதினெட்டாம் வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 முதல் 85 பேர் வரை செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்து வருகிறார்கள்.
கோவில் நடை திறக்கப்பட்ட 25 நாட்களில் 16 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தினமும் 90ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வரலாறு காணாத கூட்டம் குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பாருங்கள்..
#Sabarimala TODAY CROWD AT PAMBA. Worst situation of devotees. pic.twitter.com/UaZyZGIrYm
— BK ASTROLOGY (@bala8882) December 12, 2023
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications