ஈசிஆர் அடியோடு மாறுது.. ரூ.25 கோடியில் வருது பிரம்மாண்ட வசதி.. குஷியில் இளசுகள்.. என்னன்னு பாருங்க
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ₹25 கோடி செலவில் நீலாங்கரை மற்றும் அக்கரை இடையே 5 கிமீ சைக்கிள் டிராக்கை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
சிஎம்டிஏ உறுப்பினர்-செயலாளர் அன்ஷுல் மிஸ்ரா கூறுகையில், கடற்கரையோர மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஈசிஆர் கடற்கரைகளில் கூடு கட்ட வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சிஎம்டிஏ ஆய்வு செய்து வருகிறது.
சைக்கிள் ஓட்டும் பாதை கடற்கரையோரம், குடியிருப்புப் பகுதிகள் வழியாகச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடற்கரையோரம் உள்ள பாதையில் மரம், உலோகம் மற்றும் பிற பொருட்கள் வைத்து இந்த சாலை அமைக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் நிலப்பரப்பு பாதிக்கப்படாது. வீடுகளுக்கும் எந்த பாதிப்பு ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்பெட்டாஸ் சீட்: கரையோரத்தில் இருந்து, குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் பாதையில் ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை அமைக்கப்பட்டு இருக்கும். திட்டமிடல் குழு சார்பாக இது தொடர்பாக மீனவ சமூகங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அவர்களின் குறைகள் கேட்கப்பட்டது.
அவர்களுக்கு சிக்கல் இல்லாமல்.. அவர்களின் படகுகள் பாதிக்கப்படலாம் இங்கே டிராக் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இங்கே மீனவர்கள் கப்பலை நிறுத்த அரங்கு, வலைகளை காய வைக்க அரங்குகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடல் அலைகள் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு அருகே இந்த கட்டுமானங்கள் செய்யப்பட உள்ளன.
( அப்படி போடு.. சென்னையில் மூடப்படும் மிகப்பெரிய டோல் கேட்.. மக்களின் பல நாள் கோரிக்கை நிறைவேறுது! )
புதிய வசதிகள்: இந்த சைக்கிள் டிராக் அருகே புதிய புதிய பல வசதிகளும் வர உள்ளன. பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், கெஸெபோஸ், நடைபாதைகள், கழிப்பறைகள், குடிநீர் ஆகியவற்றைக் கொண்ட பரந்த விரிப்புகளை CMDA உருவாக்குகிறது. நியமிக்கப்பட்ட மண்டலங்களில் சுமார் 30 கணக்கிடப்பட்ட விற்பனையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

பல காலமாக இங்கே சைக்கிள் டிராக் கட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். சமீபத்தில் தெலுங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் இதேபோல் டிராக் கட்டப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது சென்னையில் இதேபோல் டிராக் கட்ட முடிவு எடுக்கப்பட்டு உள்ளது .
ஈசிஆர்; ஈசிஆர் சாலையில் ஏற்கனவே பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.
மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும். என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications