Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'நானும் மதுரைக்காரன்டா'.. கொடைக்கானல் ஏரியில் அலம்பல்.. போலீஸ் ட்ரீட்மெண்ட்டுக்கு பின் அழுது ஆக்டிங்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகருக்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருவது வழக்கம். அப்படித்தான் மதுரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார். அவர் கொடைக்கானலில் உள்ள மதுக்கடையில் அதிகப்படியாக மது அருந்துவிட்டு அலப்பறை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நட்சத்திர ஏரியில் குதித்துள்ளார். காப்பாற்ற வந்தவர்களிடம் அவர் கொடுத்த அலப்பறை பற்றி பார்ப்போம்.

தமிழ்நாட்டில் புகழ் பெற்ற மலைவாசல் தலங்களில் முக்கியமான கொடைக்கானல்.. இந்த சுற்றுலா தலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சர்வதேச அளவில் புகழ் பெற்ற கொடைக்கானலில் கிளைமேட் ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருக்கும். இங்கு சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் ஏராளமான இடங்கள் உள்ளன.

tour kodaikanal lake

நட்சத்திர ஏரி, குணா குகை, பில்லர் ராக்ஸ், பிரயண்ட் பூங்கா ரோஜா பூங்கா, செட்டியார் பார்க், குறிஞ்சி ஆண்டர் கோவில், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், கூக்கால் ஏரி, பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில், வெள்ளிநீர் வீழ்ச்சி, மாதா கோவில், சவுக்கு தோப்புகள், பேரிஜம் ஏரி, மன்னவனூர் ஏரி உள்பட இன்னும் பல இடங்கள் உள்ளன. இதேபோல் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் டிரக்கிங், கேம் பயர், நட்சத்திர சுற்றுலா விடுதிகள், சொகுசு வசதிகளுடன் கூடிய காட்டேஜ்கள் உள்பட பல்வேறு விஷயங்களும் இருக்கின்றன. இதனால் விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் கூட்டம் அலைமோதும். புதிதாக திருமணம் ஆன ஜோடிகளுக்கு கொடைக்கானல் மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது. இதனால் ஆண்டு முழுவதுமே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் யாராக இருந்தாலும் கண்டிப்பாக நட்சத்திர ஏரிக்கு போகாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த ஏரி அற்புதமாக இருக்கும். இதனால் எந்த ஏரியில் எப்போதுமே சுற்றுலா பயணிகள் அதிகம் இருப்பார்கள். இந்தநிலையில் நேற்று நட்சத்திர ஏரியில், வாலிபர் ஒருவர் திடீரென கடும் குளிரை பொருட்படுத்தாமல் குதித்து நீச்சல் அடித்து கொண்டு இருந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மற்றும் படகு ஓட்டுனர்கள் அவரை வெளியே வருமாறு சத்தம் போட்டனர். இதையடுத்து வெளியே வந்த வாலிபர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். அங்கிருந்த மக்களிடம் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு சண்டைக்கு போனார்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இவர், நட்சத்திர ஏரியில் குதித்து நீச்சல் அடித்ததாக கூறியிருக்கிறார். போலீசார் அவருக்கு அறிவுரை கூறி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக நட்சத்திர ஏரியில் போதையில் குளித்து ரகளையில் ஈடுபட்ட அந்த நபர், காப்பாற்ற வந்தவர்களை பார்த்து நானும் "மதுரைக்காரன்டா" என துள்ளிக்கொண்டு நின்றுள்ளார். ஒரு கட்டத்தில் போதை தெளிந்த உடன், ஊருக்கு கிளம்புமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது உடனே அழுது ஆக்டிங் செய்த நபருக்கு போலீசார் அறிவுரை கூறியதுடன், குளிரில் நடுங்கிய போதை இளைஞருக்கு டீ வாங்கிக்கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+