கோடை வெயிலுக்கு ஜில் ஆக குளியல் போடலாம்.. சுற்றுலாப் பயணிகளுக்கு ஒகே சொன்ன வனத்துறை.. ஸ்பாட் இதுதான்
நெல்லை: கோடை வெயிலுக்கு சுற்றுலா செல்ல நினைக்கும் பயணிகளுக்கு சூப்பர் தேர்வாக நெல்லை மாவட்டதில் உள்ள மணிமுத்தாறு அருவி உள்ளது. கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெளியில் செல்வதற்கே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பெரும்பாலானா மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. சேலம், ஈரோட்டில் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகியது.

இது போல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள்தால் குழந்தைகள் விளையாடுவதற்கும், வெளியே சுற்றுலா அழைத்து செல்லவும் பெற்றோர் விரும்புகின்றனர். இதனால் மலைவாசஸ்தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியிலும் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கடந்த 4 மாதங்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால், சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கோடை வெயில் வெளுத்து வருவதாலும், சீரமைப்பு பணிகள் முடிந்துல்லதாலும் சுற்றுலா பயணிகளுக்காக இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அருகே மேற்கொ தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கும். எவ்வளவு வெயில் அடித்தாலும் தண்ணீர் விழுந்துகொண்டு இருப்பதால் சுற்றுலா பயணிகளும் கோடை காலத்தில் தவறாமல் இங்கு வந்து குளித்து மகிழ்வார்கள்.
ஆனால், கடந்த ஆண்டும் டிசம்பர் மாதத்தில் தென் தமிழத்தில் குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, குமரி , தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த பெருமழை இந்த மணிமுத்தாறு அருவியில் இருந்த தடுப்பு கம்பிகள், பிளாட்பார்ம்கள், சுற்றுலா பயணிகள் நின்று செல்லும் இடம் என அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த மழை மணிமுத்தாறு அருவியிலும் சுற்றுலா பயணிகளை குளிக்க விடாதபடி செய்துவிட்டது. இந்த நிலையில் தான் கடந்த 4 மாதமாக அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடுப்பு கம்பிகள் அமைப்பது, பெண்கள் ஆண்கள் தனித்தனியாக வருவதற்கு வசதி, பிளாட்பார்ம்கள் அமைக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு இந்த அருவி திறக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் வழக்கம் போல் மணிமுத்தாறு அருவியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications