தமிழ்நாட்டின் “மூக்கை” தொடலாமா? மலையாளிகள் கூட்டம் கூட்டமாக வரும் இடம்! திரும்பினாலே டூரிஸ்ட் ஸ்பாட்
சென்னை: தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் இருக்கும் நாகூருக்கு எப்படி செல்வது? அங்கு என்னவெல்லாம் ஸ்பெஷல்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இப்பதிவு பதிலளிக்கும்.
தமிழ்நாட்டின் மூக்கு என்றால் உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் உடனே கூகுளில் தமிழ்நாடு மேப்பை தேடி பாருங்கள். அதில் வலதுபக்க ஓரத்தில் நடுவில் கூர்மையான ஒரு பகுதி இருக்கும். அதுதான், நாகை மாவட்டம். ஆம், நாகை மாவட்டம் அமைந்து உள்ள பகுதியை மேப்பில் பார்த்தால் மூக்கு போன்ற ஒரு உருவம் கிடைக்கும்.

பலரும் தமிழ்நாட்டின் ஓவியத்தை முகம் போன்ற வரைந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் நாகையைதான் மூக்காக வரைந்து இருப்பார்கள். ஒரு பக்கம் விவசாயமும், மறுபக்கம் கடல் வளமும் கொண்ட அழகிய மாவட்டம் நாகப்பட்டினம். பாக்ல் ஜலசந்தியை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த நாகை மாவட்டத்தில் விரல் விட்டு எண்ணிவிட முடியாத அளவுக்கு சுற்றுலா தளங்களும், ஆன்மீக தளங்களும் உள்ளன.
கடலின் அலைகள் ஆங்காரமாக முத்தமிட்டு செல்லும் கடற்கரைகளும், பச்சை போர்வை போர்த்தியதை போன்ற வயல்வெளிகளும் நிறைந்த மனதை நிறைக்கும் வளங்களை, அழகிய இடங்களை கொண்ட நாகப்பட்டினத்துக்கு ஏராளமான வெளிமாநில சுற்றுலா பயணிகளும் வருகை தருகிறார்கள்.
இங்குள்ள மும்மத வழிபாட்டுத் தலங்களும் பல மாநிலங்களை சேர்ந்த பயணிகள் வருகிறார்கள். நாகூரில் உள்ள தர்கா நூற்றாண்டு பழமைவாய்ந்த ஒன்றாகும். நாமெல்லாம் கடவுளின் தேசம் என்று தேடிச் செல்லும் கேரளாவில் இருந்தே தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நாகூர் தர்காவுக்கு வந்து செல்கிறார்கள்.
நாகூர் தர்கா மினராக்களில் உள்ள புறாக்கள், தர்காவை சுற்றிலும் அமைந்து இருக்கும் மார்க்கெட், ஸ்வீட் கடைகள் ஒரு வித்தியாசமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இங்கு கிடைக்கும் சில இனிப்பு வகை வேறு எங்குமே கிடைக்காது. குறிப்பாக தொதல், முட்டாசு, இனிப்பு சேவு போன்றவற்றுக்காக நீங்கள் மீண்டும் ஒருமுறை நாகூருக்கு சென்று வரலாம்.
நாகூர் தர்காவுக்கு மட்டும் செல்லாமல் அந்த ஊரின் வீதிகளில் வலம் வந்தாலே உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். காரணம், மிகவும் பழமையான ஓட்டு வீடுகள், திண்ணை வைத்த வீடுகள், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் என புதிய அனுபவத்தை அப்பகுதி தரும். நாகூர் என்றாலே கடலை விட முடியுமா?
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக நாகூர் கடற்கரை உள்ளது. கடலில் அனுமதிக்கப்பட்ட தொலைவு வரை இறங்கி நீங்கள் மகிழ்ச்சியாக விளையாடலாம். அங்கு விற்கப்படும் இறால் வாடாவை சாப்பிட்டு மகிழலாம். நிச்சயமாக நாகூர் பயணம் ஒரு மனதுக்கு இதமான அனுபவத்தை உங்களுக்கு வழங்கும்.
அடுத்தடுத்த மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் வாய்ப்பு இருப்பதாக் நாகூர் பயணத்துக்கு திட்டமிடுங்கள். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நாகூர் செல்ல சிறந்த காலம் என தமிழ்நாடு சுற்றுலா துறை சொல்கிறது. நாகூரிலேயே புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளன. திருச்சி விமான நிலையத்தில் இருந்து 146 கிமீ தொலைவில் நாகூர் உள்ளது. வடமாவட்ட மக்களும் சரி, தென் மாவட்ட மக்களும் சரி, எளிதில் வந்து செல்லும் அளவுக்கு கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி மத்திய பகுதியில் நாகூர் அமைந்து உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications