தமிழ்நாட்டின் “வாய்குள்” போலாமா.. எட்டிப்பார்த்தாலே இலங்கை தெரியுமாமே! பிரம்மிக்க வைக்கும் ஸ்பாட்
சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாக திகழும் ராமேஸ்வரத்துக்கு எப்படி செல்வது? அங்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க என்னவெல்லாம் உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டின் வரைபடம் நம்மில் பெரும்பாலானோருக்கு நினைவில் இருக்கும். அந்த வரைபடம் ஒரு பக்கம் திரும்பிய மனித முகத்தின் தோற்றம்போல் இருக்கும். அதுபோல் சித்தரித்து பல ஓவியங்களும் உலாவிக்கொண்டு இருக்கின்றன. இப்படிதான் தமிழ்நாட்டின் மூக்கு பகுதியாக பார்க்கப்படும் நாகப்பட்டினம் குறித்து சில வாரங்களுக்கு முன் ஒரு சுற்றுலா பதிவை நாம் வெளியிட்டோம்.

சரி மூக்கு பற்றி சொல்லிட்டீங்க.. வாய் எது? என்ற கேள்விகளும் எழுந்தன. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மூக்கு போன்ற வடிவத்திலேயே நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் போன்றவை வந்துவிடுகின்றன. அதற்கு அடுத்து புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடல் எல்லையான ராமேஸ்வரம்தான் வாய்போன்ற தோற்றத்தை தருகிறது.
வெறும் வரைபடம் மட்டுமின்றி, ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல அம்சங்கள் உள்ளன. ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலுக்கே பல மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கோயிலுக்கு வந்து வழிபட்டுவிட்டு அடுத்த சில நாட்கள் இங்கு தங்கி இருந்து சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு செல்கின்றனர்.
பாம்பன் பாலம்: ராமேஸ்வரம் என்றாலே நம் அனைவரது நினைவுக்கு வருவது நீல கடலுக்கு நடுவே நீளமாக செல்லும் பாம்பன் பாலம்தான். இதன் உண்மையான பெயர் அன்னை இந்திரா காந்தி சாலை பாலம், பாம்பன் என்ற ஊரில் இது இருப்பதால் இப்பெயர் வந்துவிட்டது. ராமேஸ்வரம் என்ற தீவை இந்தியாவின் நிலப்பகுதியுடன் இணைக்கும் பிரமாண்ட இந்த பாலம்தான் தென் இந்தியாவின் மிக நீளமான கடல் வழிப்பாலமாகும். இதில் செல்வதும், சாலையோரம் வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி பார்ப்பதும் நடுக்கடலுக்குள் நிற்கும் உணர்வை தரும். நீங்கள் நேரம் கிடைக்கும்போது அவ்வழியே ரயில் பாலத்தில் ரயிலில் சென்றால் உங்கள் கண்களுக்கு கூடுதல் ட்ரீட்டாக அமையும்.

அரியமான் கடற்கரை: ராமேஸ்வரத்துக்கு வரும் வெளி மாநில, வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் தவறவிடும் சுற்றுலா தலம் அரியமான் கடற்கரை. சவுக்கு தோப்புகள் சூழ, அதை தாண்டி சென்றால் சுவர்க்கம்போல் வெள்ளை நிற மணலில் எழில்மிகு காட்சியை தருகிறது அரியமான் கடற்கரை. ராமேஸ்வரத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கடற்கரை சுற்று வட்டார பகுதி மக்களின் விருப்பமான சுற்றுலா தலமாக உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டணம் செலுத்தி இதில் படகுசவாரி செல்லலாம். கடலில் குடும்பத்தோடு குளித்தும் மகிழலாம்.

தனுஷ்கோடி: 1964 ஆம் ஆண்டு இலங்கையையும், தமிழ்நாட்டையும் தாக்கிய அதிதீவிர புயலில் அழித்துபோன அழகிய கிராமம் தனுஷ்கோடி. 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவந்த இந்த மீனவ கிராமம் அழிந்துபோன சுவடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் இன்னும் அங்கே காணக்கிடைக்கின்றன. இங்கிருந்து எட்டிப்பார்த்தால் இலங்கையின் கடலோர எல்லைப்பகுதி தெரியும் அளவுக்கு இந்தியாவின் ஆதி எல்லையில் அமைந்து உள்ள தனுஷ்கோடி, மறக்க முடியாத பல நினைவுகளை சுமக்க வைக்கும் தலமாக இருக்கும்.
மதுரை விமான நிலையத்திற்கு ராமேஸ்வரத்துக்கு 149 கிமீ தொலைவாகும். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ராமேஸ்வரத்துக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாலை மார்க்கமாக திருச்சியில் இருந்து 271 கிமீ, தஞ்சையிலிருந்து 231 கிமீ, மதுரையிலிருந்து 169 கிமீ, சென்னையில் இருந்து 650 கிமீ தொலைவில் உள்ளது ராமேஸ்வரம்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications