கடவுள் தேசமே போக விரும்பும் கனவுப்பாதை.. மூணாறு-தேனி சாலையில்.. பர்ஸில் பணம் இனி முக்கியம்
மூணாறு: இந்தியாவில் இவ்வளவு அழகான மலைப்பாதை சாலைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. தென்னிந்தியாவில் ஒரு மலைச்சாலை மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் அது மூணாறு-தேனி சாலை தான். அந்த சாலையில் மூணாறு முதல் போடி மெட்டு வரை சாலை வடிகால் வசதியுடன் தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது புதிய சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சுங்கவரி கட்டணம் செலுத்தி சென்றன.
கடவுள் தேசமான கேரளா, அப்படி புகழப்பட முக்கிய காரணமான மாவட்டங்களில் இடுக்கியும் ஒன்று.இடுக்கி மாவட்டம் என்பது கேரளாவின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்று. முற்றிலும் மலையிலேயே அமைந்துள்ள இந்த மாவட்டம் கோட்டயத்தை தாண்டி, அந்த பக்கம் எர்ணாகுளம் வரை பரந்து விரிந்து கடக்கிறது. சுமார் 100 கிலோ மீட்டர் மலைப்பரப்பளவில் கட்டப்பனை, தொடுபுழா, குமுளி, மூணாறு, நெடுங்கண்டம் ஆகிய மிகப்பிரபலமான ஊர்கள் உள்ளன. தேக்கடி,இடுக்கி அணை, மூணாறு உள்ளிட்ட ஏராளமான புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் இருக்கிறது.

இடுக்கி மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருந்து சென்றால், தேனி மாவட்டம் வழியாக போவதுதான் எளிதாக இருக்கும். மதுரையில் இருந்து கொச்சி செல்ல மூணாறு வழியாக தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த சாலையில் மூணாறில் இருந்து போடி மெட்டு வரையிலான 42 கிலோ மீட்டர் தூர சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை என்பது இந்தியாவின் புகழ் பெற்ற சாலையாக மாறிவிட்டது. மூணாறுக்கு சுற்றுலா வருவோர், இந்த சாலையில் பயணிப்பதற்காகவே வரும் அளவிற்கு தரமாக அமைக்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்கள், அடர்ந்த காடுகளுக்கு நடுவே வளைந்த வளைந்து செல்லும் இந்த சாலை மிக அற்புதமான பயண அனுபவத்தை தருகிறது. அதுமட்டுமின்றி மூணாறுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள், தமிழ்நாட்டில் இருந்து மூணாறுக்கு வரும் வாகனங்கள் முன்பை விட தற்போது குறைந்த நேரத்தில் மூணாறுக்கு போக முடிகிறது. தமிழ்நாட்டில் இருந்து மூணாறு வரும் சுற்றுலா பயணிகள் போடிமெட்டு-மூணாறு சாலையில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்,
இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் சார்பில் மூணாறு-போடிமெட்டு சாலையில் சுங்கச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மூணாறை அடுத்த லாக்காடு பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று சுங்கச்சாவடி திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து போடிமெட்டு வழியாக மூணாறு, அடிமாலி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வாகனங்களும், எர்ணாகுளம், அடிமாலி, மூணாறு பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்ற வாகனங்களும் இந்த சுங்கச்சாவடியில் சுங்கவரி செலுத்திதான் செல்கின்றன.
இந்த சுங்கச்சாவடி மூலம் வசூலாகும் ெதாகையை கொண்டு மூணாறு-போடிமெட்டு சாலையில் பராமரிப்பு பணிகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது மலைச்சாலை என்பதால் எளிதில் சேதமடைய வாய்ப்பு என்பதால், விரைவில் சீரமைக்க சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது அவசியம் என்பதால் எந்த எதிர்ப்பும் வரவில்லை.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications