ஊட்டிக்கு இப்படி ஒரு ரூட் இருக்கா? பலரும் அறியாத ரகசிய பாதை.. போறது அவ்வளவு ஈஸி இல்லை

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: கோவையில் இருந்து ஊட்டி செல்வோர் பொதுவாக மேட்டுப்பாளையம், குன்னூர் வழியாகவே செல்வார்கள்.. ஆனால் கோவையில் இருந்து காரமடை வழியாக முள்ளி, கீழ் குந்தா, மஞ்சூர் வழியாக வேறு ஒரு பாதையில் ஊட்டிக்கு போக முடியும்.. அந்த பாதையை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஊட்டிக்கு செல்ல சென்னையில் இருந்து வருவோர் அல்ல கோவையை தவிர மற்ற மாவட்டங்களில் இருந்து வருவோர் நேராக அவினாசி அன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்தை அடைந்து அங்கிருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு செல்வார்கள். ஒரு சிலர் கோத்தகிரி வழியாகவும் ஊட்டிக்கு செல்வார்கள்..

New route from Coimbatore to Ooty What s special about the Manjoor route

ஆனால் கோவையில் இருந்து செல்வோர், நேராக துடியலூரை கடந்த உடன் பெரிய நாயக்கன் பாளையம், காரமடை வழியாக மெயின் சாலையில் மேட்டுப்பாளையத்தை அடைந்து அங்கிருந்து வழக்கம் போல் குன்னூர் அல்லது கோத்தகிரி வழியாக ஊட்டி செல்வார்கள். ஆக மொத்தம் எங்கிருந்து வந்தாலும் மேட்டுப்பாளையத்தை தாண்டாமல் யாரும் ஊட்டி போக மாட்டார்கள்... இதுதான் பலரும் கடைபிடிக்கும் வழக்கம்.

அதேநேரம் ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் போகாமல் இன்னொரு ரூட் வழியாகவும் போகலாம். கோவையில் இருந்து நேரடியாக வனப்பாதை வழியாக ஊட்டிக்கு போக முடியும். அது தான் மஞ்சூர் ரூட். அதேநேம் இந்த மஞ்சூர் ரூட் அழகான பாதை என்றாலும், மிகவும் அதிகமான வனவிலங்கு நடமாட்டம் உள்ள ஆபத்தான பாதையும் கூட.. எனவே இந்த பாதையில் செல்வோர் மிக கவனமாகவே செல்ல வேண்டும்..

சரி நேராக விஷயத்திற்கு போகலாம்.. கோவையில் இருந்து காரமடை வழியாக முள்ளி, குந்தா, மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு போக முடியும்.. இந்த சாலையை பொறுத்தவரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது.. இந்த சாலையில் பேருந்துகள் செல்கின்றன. காரமடையில் இருந்த கிளம்பினால் வெள்ளியங்காட்டில் இருந்து மஞ்சூர் வரை மிக அடர்ந்த வனப்பகுதியாகும்.. இது சிங்கிள் பாதை போல் தான் தார் சாலை இருக்கும். இந்த சாலையில் யானைகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் சாலையில் யானைகளை பார்க்க முடியும்.. கோவையில் இருந்து பேருந்தில் செல்வதே மிகவும் நல்லது. அதிகாலை 5.40க்கு ஒரு பேருந்தும், காலை 10.30க்கு ஒரு பேருந்தும் இருப்பதாக உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள்..

அதேநேரம் சொந்த வாகனத்திலும் வரலாம். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருவோர், முள்ளி என்ற செக்போஸ்டில் உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்த பின்னரே அனுமதிப்பார்கள்.. காரமடை மஞ்சூர் சாலையில் பயணித்து வந்தால் முதலில் முள்ளி செக் போஸ்ட். முள்ளி வனத்துறை சோதனை சாவடியில் இரண்டு ரூட் போகிறது. ஒரு ரூட் கெத்தை வழியாக கேரளா போகிறது.

இன்னொரு ரூட் மஞ்சூர் போகிறது. அந்த இன்னொரு ரூட்டான மஞ்சூர் சாலையில் தான் ஊட்டிக்கு செல்ல விரும்புவோர் பயணிக்க வேண்டும். யானைகளை அதிகமாக வரும் என்பது ஒருபுறம் எனில், நிறைய காட்டெருமைகளையும் இந்த சாலையில் பார்க்க முடியும். மஞ்சூர் சென்ற பின்னர் இறங்க வேண்டும். மஞ்சூரில் இருந்து ஊட்டிக்கு பேருந்துகள் அடிக்கடி இருக்கிறது. அங்கிருந்து எளிதாக ஊட்டி செல்ல முடியும். காரமடை டூ மஞ்சூர் பாதை பயணம் அற்புதமான அனுபவம் என்றாலும் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது ஆபத்தானது என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.. கார்களில் அல்லது பேருந்தில் வருவதில் பிரச்சினை இல்லை.. இரவில் எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+