Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி போறவங்களின் கனவு சார்.. மலை ரயிலில் போக விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் ஏறி பயணம் செய்வது என்பது வெளிநாட்டினர் கனவு.. எனவே எப்போதுமே இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட முடியாது. இதனால் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்க முடியாமல் காரில் ஏக்கத்துடன் ஊட்டி போய் வருவார்கள்.. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோடை கால சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளைக் கண்டு ரசித்து வருகிறார்கள்.

nilgiri mountain railway Good news for those wishing to travel on the Ooty Mountain Railway

மிகவும் பழமை வாய்ந்த மலை ரயிலை கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து மலை ரயிலுக்கு பெருமை சேர்த்தது. இந்தியாவில் இமயமலை ரயிலுக்குப் பிறகு இந்த அந்தஸ்தைப் பெற்ற இரண்டாவது மலை ரயில் இதுவாகும். செங்குத்தான மலைப்பாதையில் ஏறுவதற்காகப் பிரத்யேகமான 'ரேக் அண்ட் பினியன்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் ஒரே ரயில் இதுதான்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்குச் செல்ல சுமார் 4 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகிறது ஊட்டியில் இருந்து கீழே இறங்க சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகிறது. இந்த மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது.

ஊட்டி மலை ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்ட நாளைக்கு முன்பே 'IRCTC' இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். கடைசி நேரப் பயணத்திற்கு மேட்டுப்பாளையம் நிலையத்தில் ' பொது டிக்கெட்' மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வழங்கப்படும். இந்த டிக்கெட்டை வாங்க ஒரு நாள் இரவு பகல் காத்திருந்து வாங்குவார்கள். அந்த அளவிற்கு முக்கியமான சுற்றுலா ரயிலாகும். இதில் 250 பாலங்கள் மற்றும் 16 சுரங்கப்பாதைகளை ரயில் கடந்து செல்லும். கல்லார், ஹில் குரோவ் , குன்னூர் மற்றும் லவ்டேல் ஆகிய நிலையங்கள் மிகவும் அழகானவை ஆகும்.

இந்த நிலையில் தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோடைகால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதாவது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் மார்ச் 27 (நேற்று) முதல் வருகிற ஜூலை மாதம் 5-ந்தேதி வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது.

சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் ரயில் நிலையத்திற்கு காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இன்று 28-ந்தேதி முதல் ஜூலை மாதம் 6-ந்தேதி வரை சனி, திங்கட்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+