Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானல் தனியார் சொகுசு பங்களாவுக்கு தேடி வந்த விருந்தாளிகள்.. கடைசியில் செம்ம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சொகுசு பங்களாவுக்குள் காட்டெருமைகள் கூட்டமாக புகுந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், உடனே வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, காட்டெருமைகளை பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.

இந்தியாவின் புகழ்பெற்ற கோடைவாசல் தளங்களில் ஒன்றான கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் பசுமை பாலைவனமாக அற்புதமான காட்டுப்பகுதியாகும். பசுமை பாலைவனம் என்று அழைக்கப்படும் தேயிலை தோட்டங்கள் இல்லாத பகுதியாக கொடைக்கானல் இருக்கிறது. கொடைக்கானல் வனப்பகுதி என்பது எளிதில் யாரும் நுழைய முடியாத அளவிற்கு மிகுந்த அடர்ந்த வனப்பகுதியாகும்.

Wildebeest herd inside a luxury bungalow in Kodaikanal A super treat for the guest

இயற்கை இன்னமும் அப்படியே இருக்கும் இடமாக கொடைக்கானல் வனப்பகுதி இருக்கிறது. கொடைக்கானல் நகர் தொடங்கி கீழே பெரிய குளம் வரை முற்றிலும் விவசாய தோட்டங்களாகவே இருக்கும்.. அதேநேரம் கொடைக்கானல் முதல் வத்தலக்குண்டு செல்லும் பிரதான சாலைப்பகுதியில் வனப்பகுதிகளே மிக அதிகமாக இருக்கும்.

கொடைக்கானல் மலைப்பகுதியை பொறுத்தவரை காட்டெருமை, காட்டுப்பன்றி, காட்டு யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. இதில், காட்டெருமைகள் அவ்வப்போது கொடைக்கானல் நகருக்குள்ளேயே சர்வ சாதாரணமாக உலா வந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்துவது வாடிக்கை. சில நேரம் வாகனங்களை தாக்குவதுடன், விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்யும்.

காட்டுயானைகளை பொறுத்தவரை கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் அதிகமாக இருக்கும். மேல்மலை பகுதிகளில் கிளாவரை பகுதியில் தான் அதிகம் இருக்கும். இந்தநிலையில் கொடைக்கானல் வனத்துறை அலுவலகம் அருகே பர்ன்ஹில் சாலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு பங்களா வளாகத்துக்குள் நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக புகுந்தன. பங்களா வளாகத்திலேயே முகாமிட்ட காட்டெருமைகள், அப்பகுதியை சுற்றியே உலா வந்தன.

ஒரு கட்டத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் சூழ்ந்து கொண்ட காட்டெருமைகள் அச்சறுத்தும் வகையில் சுற்றின. இதனை பார்த்த பங்களா ஊழியர்கள், அதன் உரிமையாளரிடம் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் காட்டெருமைகளை பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.

ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் சொகுசு பங்களா பகுதிக்குள் காட்டெருமைகள் புகுந்தன. பின்னர் மீண்டும் வனத்துறையினர் வந்து, காட்டெருமைகளை அங்கிருந்து தனியார் தோட்ட பகுதிகள் வழியாக வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். கடந்த சில நாட்களாகவே நகர் பகுதிக்குள் காட்டெருமைகள் அடிக்கடி புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+