கொடைக்கானல் தனியார் சொகுசு பங்களாவுக்கு தேடி வந்த விருந்தாளிகள்.. கடைசியில் செம்ம ட்விஸ்ட்
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சொகுசு பங்களாவுக்குள் காட்டெருமைகள் கூட்டமாக புகுந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், உடனே வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, காட்டெருமைகளை பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.
இந்தியாவின் புகழ்பெற்ற கோடைவாசல் தளங்களில் ஒன்றான கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் பசுமை பாலைவனமாக அற்புதமான காட்டுப்பகுதியாகும். பசுமை பாலைவனம் என்று அழைக்கப்படும் தேயிலை தோட்டங்கள் இல்லாத பகுதியாக கொடைக்கானல் இருக்கிறது. கொடைக்கானல் வனப்பகுதி என்பது எளிதில் யாரும் நுழைய முடியாத அளவிற்கு மிகுந்த அடர்ந்த வனப்பகுதியாகும்.

இயற்கை இன்னமும் அப்படியே இருக்கும் இடமாக கொடைக்கானல் வனப்பகுதி இருக்கிறது. கொடைக்கானல் நகர் தொடங்கி கீழே பெரிய குளம் வரை முற்றிலும் விவசாய தோட்டங்களாகவே இருக்கும்.. அதேநேரம் கொடைக்கானல் முதல் வத்தலக்குண்டு செல்லும் பிரதான சாலைப்பகுதியில் வனப்பகுதிகளே மிக அதிகமாக இருக்கும்.
கொடைக்கானல் மலைப்பகுதியை பொறுத்தவரை காட்டெருமை, காட்டுப்பன்றி, காட்டு யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. இதில், காட்டெருமைகள் அவ்வப்போது கொடைக்கானல் நகருக்குள்ளேயே சர்வ சாதாரணமாக உலா வந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்துவது வாடிக்கை. சில நேரம் வாகனங்களை தாக்குவதுடன், விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்யும்.
காட்டுயானைகளை பொறுத்தவரை கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் அதிகமாக இருக்கும். மேல்மலை பகுதிகளில் கிளாவரை பகுதியில் தான் அதிகம் இருக்கும். இந்தநிலையில் கொடைக்கானல் வனத்துறை அலுவலகம் அருகே பர்ன்ஹில் சாலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு பங்களா வளாகத்துக்குள் நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக புகுந்தன. பங்களா வளாகத்திலேயே முகாமிட்ட காட்டெருமைகள், அப்பகுதியை சுற்றியே உலா வந்தன.
ஒரு கட்டத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் சூழ்ந்து கொண்ட காட்டெருமைகள் அச்சறுத்தும் வகையில் சுற்றின. இதனை பார்த்த பங்களா ஊழியர்கள், அதன் உரிமையாளரிடம் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் காட்டெருமைகளை பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.
ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் சொகுசு பங்களா பகுதிக்குள் காட்டெருமைகள் புகுந்தன. பின்னர் மீண்டும் வனத்துறையினர் வந்து, காட்டெருமைகளை அங்கிருந்து தனியார் தோட்ட பகுதிகள் வழியாக வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். கடந்த சில நாட்களாகவே நகர் பகுதிக்குள் காட்டெருமைகள் அடிக்கடி புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications