கொடைக்கானல் தனியார் சொகுசு பங்களாவுக்கு தேடி வந்த விருந்தாளிகள்.. கடைசியில் செம்ம ட்விஸ்ட்
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சொகுசு பங்களாவுக்குள் காட்டெருமைகள் கூட்டமாக புகுந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், உடனே வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, காட்டெருமைகளை பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.
இந்தியாவின் புகழ்பெற்ற கோடைவாசல் தளங்களில் ஒன்றான கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் பசுமை பாலைவனமாக அற்புதமான காட்டுப்பகுதியாகும். பசுமை பாலைவனம் என்று அழைக்கப்படும் தேயிலை தோட்டங்கள் இல்லாத பகுதியாக கொடைக்கானல் இருக்கிறது. கொடைக்கானல் வனப்பகுதி என்பது எளிதில் யாரும் நுழைய முடியாத அளவிற்கு மிகுந்த அடர்ந்த வனப்பகுதியாகும்.

இயற்கை இன்னமும் அப்படியே இருக்கும் இடமாக கொடைக்கானல் வனப்பகுதி இருக்கிறது. கொடைக்கானல் நகர் தொடங்கி கீழே பெரிய குளம் வரை முற்றிலும் விவசாய தோட்டங்களாகவே இருக்கும்.. அதேநேரம் கொடைக்கானல் முதல் வத்தலக்குண்டு செல்லும் பிரதான சாலைப்பகுதியில் வனப்பகுதிகளே மிக அதிகமாக இருக்கும்.
கொடைக்கானல் மலைப்பகுதியை பொறுத்தவரை காட்டெருமை, காட்டுப்பன்றி, காட்டு யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. இதில், காட்டெருமைகள் அவ்வப்போது கொடைக்கானல் நகருக்குள்ளேயே சர்வ சாதாரணமாக உலா வந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்துவது வாடிக்கை. சில நேரம் வாகனங்களை தாக்குவதுடன், விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்யும்.
காட்டுயானைகளை பொறுத்தவரை கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் அதிகமாக இருக்கும். மேல்மலை பகுதிகளில் கிளாவரை பகுதியில் தான் அதிகம் இருக்கும். இந்தநிலையில் கொடைக்கானல் வனத்துறை அலுவலகம் அருகே பர்ன்ஹில் சாலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு பங்களா வளாகத்துக்குள் நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக புகுந்தன. பங்களா வளாகத்திலேயே முகாமிட்ட காட்டெருமைகள், அப்பகுதியை சுற்றியே உலா வந்தன.
ஒரு கட்டத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் சூழ்ந்து கொண்ட காட்டெருமைகள் அச்சறுத்தும் வகையில் சுற்றின. இதனை பார்த்த பங்களா ஊழியர்கள், அதன் உரிமையாளரிடம் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் காட்டெருமைகளை பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.
ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் சொகுசு பங்களா பகுதிக்குள் காட்டெருமைகள் புகுந்தன. பின்னர் மீண்டும் வனத்துறையினர் வந்து, காட்டெருமைகளை அங்கிருந்து தனியார் தோட்ட பகுதிகள் வழியாக வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். கடந்த சில நாட்களாகவே நகர் பகுதிக்குள் காட்டெருமைகள் அடிக்கடி புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications