இரவில் வெளுத்த கனமழை.. இன்றும் 10 மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்குமாம்.. எங்கெங்கே? வானிலை அலர்ட்!
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் இரவு முழுவதும் இடி மின்னலோடு மழை பெய்ய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை இரவு நேரத்தில் இடி மின்னலோடு மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, வடபழனி, தி.நகரில் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது. ஓட்டேரி, பெரம்பூர், திருவிக நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை வரை கனமழை பெய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (ஆகஸ்ட் 28) நிலவரரத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications