கொட்டப்போகும் கனமழை.. சென்னை உட்பட 23 மாவட்டங்களுக்கு அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காலை 10 மணி முதல் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னதாக கனமழை காரணமாக நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கும், காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கனமழை குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், "செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications