Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐயோ.. நெல்லை-திருச்செந்தூர் இடையே சிக்கிய சென்னை ரயில்.. உணவு, குடிநீர் இல்லாமல் பயணிகள் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயில் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, ரயிலில் சிக்கியுள்ள பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த நான்கு மாவட்டங்களுக்கும் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

700 train passengers trapped in Srivaikuntam are suffering without food and drinking water

வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகள், இந்த மழை வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன. எனவே சென்யைில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

4 மாவட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த 4 மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்களும் இன்று இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம் பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 6 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு பெருமழையாகும். மழை வெள்ளத்தால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ரயில் சேவையை பொறுத்த அளவில், சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில், நெல்லை - சென்னை மற்றும் சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில், திருச்நெந்தூர் - பாலக்காடு, நெல்லையில் இருந்து ஜாம்நகர் செல்லும் ரயில், கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் விரைவு ரயில் சேவை போன்றவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதில் திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரும் 'சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில்', நேற்றிரவு திருச்செந்தூரிலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டிருக்கிறது. ஆனால் ரயில் லோகோ பைலட்டால் தண்டவாளத்தை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே ரயிலை ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தியிருக்கிறார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஸ்ரீவைகுண்டத்திற்கு அடுத்து உள்ள தாதன்குளத்தில், வெள்ளம் காரணமாக ரயில் தண்டவாளத்தின் அடி பாகம் முழுவதும் அரித்து சென்றிருக்கிறது. கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும், ரயில் பெரும் விபத்திற்கு உள்ளாகியிருக்கும்.

இது குறித்து ரயிலில் சிக்கியிருந்த பயணிகள் கூறுகையில், "ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரவு 9.30 மணிக்கு ரயில் நின்றது. காலையில் பேருந்து வந்து அதில் 100 வரை இங்கிருந்து அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், மீண்டும் அந்த பேருந்து ரயில் நிலையத்திற்குள் வர முடியவில்லை. அந்த அளவுக்கு வெள்ளத்தால் ரயில் நிலையம் சூழப்பட்டிருக்கிறது. குடிக்க குடிநீர், உணவு இல்லாமல் 650-700 பயணிகள் தவித்து வருகிறோம். குழந்தைகள், முதியோர், பெண்கள், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+