அரபிக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 25ம் தேதி வங்கக்கடலில் சம்பவம் இருக்கு
சென்னை: அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24 முதல் 28 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு அரபிக்கடல், கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் மணிக்கு 25-45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்ககடலை பொறுத்தவரை இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 24 முதல் 26 வரை மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே கேரளாவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இன்று அதிகாலை 05:30 மணிக்கு கர்நாடகா-கோவா கடற்கரைக்கு அப்பால் கிழக்கு-மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது, இது லட்சத்தீவு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வளிமண்டல சுழற்சியால் உருவாகி உள்ளது. இந்த சூறாவளி சுழற்சியானது சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிமீ வரை நீண்டிருக்கிறது. இது தென்மேற்கு நோக்கி சாய்ந்து நகர்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று வடக்கு வங்காள விரிகுடா மற்றும் சுற்றுப்புறங்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காரணங்களால் அடுத்த 5 நாட்களுக்கு கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை கேரளா மற்றும் மாஹே ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications