Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கக் கடலில் மாற்றம்.. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்? தமிழகத்தில் கொட்ட துவங்கியது மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கத்தரி வெயில் தொடங்கியது முதலே அதை தணிக்கும் விதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில், கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதி மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது... கோவா - தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

Bay of Bengal Weather Rain

இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதால்., கேரளாவில் ஓரிரு நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் சூழல் உள்ளது..

தென்மேற்கு பருவமழை

பிறகு படிப்படியாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பரவக்கூடும். மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 27-ம் தேதி உருவாகக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், வரும் 27ம் தேதி காற்றழுத்த தழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் - காற்றழுத்த பகுதி

மத்திய கிழக்கு அரபிக்கடலில், கோவா, தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால், நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த, 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், வரும் 27ம் தேதி, புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 28 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில், இன்று முதல், 26 வரையிலான காலத்தில், அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகலாம்.

புறநகர்களில் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக துாத்துக்குடியில், 101 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படியே, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியிருக்கிறது.. அடுத்த 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு நல்ல மழை உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போதே மாநிலத்தில் ஆங்காங்கே குளிர்ச்சி தென்பட துவங்கியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+